(1671)

(1671)

கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,

திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,

மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும்

புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே.

 

பதவுரை

கணம் மருவு

திரள் மிக்கிருந்துள்ள

மயில்

மயில்களானவை

அகவு

கூத்தாடப்பெற்ற

கடி பொழில் சூழ்

மணம்மிக்க சோலைகளாற் சூழப்பட்டதாய்

நெடு மறுகில்

பெரிய திருவீதிகளையுடைத்தாய்

திணம் மருவு

திடம் பொருந்திய

கனம்

கனகமயமான

மதிள்

திருமதிள்களாலே

சூழ்

சூழப்பட்டதான

திருக்கண்ணபுரத்து, உறையும்

மணம் மருவு தோள் ஆய்ச்சி

பரிமளம் பொருந்திய தோள்களை யுடையளான இடைச்சி

ஆர்க்க

(தாம்பினால்) கட்ட

உரலோடும் போய்

உரலோடு கூடச் சென்று

புணர் மருதம்

இரட்டை மருதமரங்கள்

இற

இற்று முறிந்து விழும்படி

நடந்தாற்கு

நடைகற்ற பெருமானுக்கு

என் பொன் வளை இழந்தேன்-.

 

English Translation

Tirukkannapuram is surrounded by strong walls, wide streets and fragrant graves with peacocks in flocks dancing everywhere.  Here resides the Lord who was fethered to a mortar by the fragrant coiffured Dame Yasoda; he then toddled between the Marudu trees and destroye them, Alas, I have lost my beautiful golden bangles to him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top