(1531)
துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்
நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த
குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே.
பதவுரை
|
துன்று |
– |
நெருங்கியும் |
|
ஒளி |
– |
ஒழுங்குபெற்று மிருக்கிற |
|
துகில் படலம் |
– |
த்வஜபடங்களின் திரள்கள் |
|
மாளிகை மேல் |
– |
மாளிகைகளின் மேல் |
|
எங்கும் துன்னி |
– |
எல்லாவிடங்களிலும் நிபிடமாய் |
|
ஆர நின்று |
– |
பரம்பியிருந்து |
|
வான் மூடும் |
– |
ஆகாசத்தை மறையா நின்றதாய் |
|
நீள் செல்வம |
– |
நிறைந்த செல்வத்தை யுடையதான |
|
திரு நறையூர்-; |
||
|
மன்று ஆர |
– |
வெளிநிலமெங்கும் |
|
குடம் ஆடி |
– |
குடக்கூத்தாடினவனும் |
|
வரை எடுத்து |
– |
கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி |
|
மழை தடுத்த |
– |
மழையைத் தடைசெய்தவனும் |
|
குன்று ஆரும் திரள் தோளன் |
– |
மலைபோன்று திரண்ட திருத்தோள்களையுடையனுமான பெருமானுடைய |
|
குரை கழலே |
– |
ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே |
|
நெஞ்சே! அடை-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருமாளிகைகளில் த்வஜபடங்கள் கட்டியிருப்பதாக வருணித்தல் செல்வமிகுதியை விளக்குமென்க.
குரைகழல் இரட்டுற மொழிதலாகக்கொண்டு குரைகழலையுடைய கழல்என்க கழல் – காலிலணியும் ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர். குரைகழல் – வினைத்தொகைப் யுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
English Translation
O Heart! Rows of cloth flutter on mansions everywhere density, hiding the sky in wealthy Tirunaraiyur. The Lord danced with pots and lifted a mountain to stop the rains with his mighty shoulders. Attain his resounding feet.
