(1531)

(1531)

துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்

நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்

மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த

குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே.

 

பதவுரை

துன்று

நெருங்கியும்

ஒளி

ஒழுங்குபெற்று மிருக்கிற

துகில் படலம்

த்வஜபடங்களின் திரள்கள்

மாளிகை மேல்

மாளிகைகளின் மேல்

எங்கும் துன்னி

எல்லாவிடங்களிலும் நிபிடமாய்

ஆர நின்று

பரம்பியிருந்து

வான் மூடும்

ஆகாசத்தை மறையா நின்றதாய்

நீள் செல்வம

நிறைந்த செல்வத்தை யுடையதான

திரு நறையூர்-;

மன்று ஆர

வெளிநிலமெங்கும்

குடம் ஆடி

குடக்கூத்தாடினவனும்

வரை எடுத்து

கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி

மழை தடுத்த

மழையைத்  தடைசெய்தவனும்

குன்று ஆரும் திரள் தோளன்

மலைபோன்று திரண்ட திருத்தோள்களையுடையனுமான பெருமானுடைய

குரை கழலே

ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே

நெஞ்சே! அடை-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாளிகைகளில் த்வஜபடங்கள் கட்டியிருப்பதாக வருணித்தல் செல்வமிகுதியை விளக்குமென்க.

குரைகழல் இரட்டுற மொழிதலாகக்கொண்டு குரைகழலையுடைய கழல்என்க கழல் – காலிலணியும் ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர்.  குரைகழல் – வினைத்தொகைப் யுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.

 

English Translation

O Heart!  Rows of cloth flutter on mansions everywhere density, hiding the sky in wealthy Tirunaraiyur.  The Lord danced with pots and lifted a mountain to stop the rains with his mighty shoulders.  Attain his resounding feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top