(1514)
மிடையா வந்த வேல்மன்னர் வீய விசயன் தேர்கடவி,
குடையா வரையொன் றெடுத்தாயர் கோவாய் நின்றான் கூராழிப்
படையான் வேதம் நான்கைந்து வேள்வி யங்க மாறிசையேழ்
நடையா வல்ல அந்தணர்வாழ் நறையூர் நின்ற நம்பியே.
பதவுரை
|
மிடையா வந்த |
– |
நெருங்கி (கூட்டங்கூட்டமாக) (போர்க்களததில்) வந்து நின்ற |
|
வேல் மன்னர் |
– |
வேற்படைக்கையரான |
|
வீய |
– |
தொலையும்படி |
|
விசயன் தேர் கடவி |
– |
அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனும் |
|
ஒன்று வரை |
– |
கோவர்த்தனமென்கிற ஒரு மலையை |
|
குடையா எடுத்து |
– |
குடையாகத் தூக்கிப் பிடித்து |
|
ஆயர் கோ ஆய் நின்றான் |
– |
இடையர்களுக்கு ரக்ஷகனாய் நின்றவனும் |
|
கூர் ஆழி படையான் |
– |
கூர்மைபொருந்திய திருவாழியை ஆயுதமான வுடையவனுமான எம்பெருமான்,- |
|
வேதம் நான்கு |
– |
நான்கு வேதங்களையும் |
|
ஐந்து வேள்வி |
– |
பஞ்ச மஹாயஜ்ஞங்களையும் |
|
ஆறு அங்கம் |
– |
ஆறு வேதாங்கங்களையும் |
|
ஏழ் இசை |
– |
ஸப்த ஸ்வரங்களையும் |
|
நடை ஆ வல்ல |
– |
எப்போதும் போது போக்காகக்கொண்ட |
|
அந்தணர் |
– |
பிராமணர் |
|
வாழ் |
– |
வாழுமிடமான |
|
நறையூர், நின்ற நம்பி -. |
||
English Translation
The Lord – who drove the chariot for Vijayan and destroyed the armed mighty kings, who lifted a mount and stood as the cowherd clan’s protector and who wields the sharp discus-resides in Naraiyur where Vedic seers are adept in the four Vedas, five sacrifices, six angas and seven svaras of music.
