(1567)

(1567)

நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை

கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,

சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்

நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே.

 

பதவுரை

நல் நீர் வயல் புடை சூழ் நறையூர்

நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில்

நின்ற

நித்யாவஸம் செய்தருள்கின்ற

நம்பியை

எம்பெருமான் விஷயமாக,

கல் நீர மால் வரை தோள்

ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும்

மங்கையர் கோன்

திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான

கலிகன்றி

திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த)

சொல் நீர

கொண்டாடிச் சொல்ல வேண்டுவதையே ஸ்வபாவமாகவுடைய

சொல் மாலை

இச்சொல் மாலைகளை

சொல்லுவார்கள்

கற்பவர்கள்

சூழ் விசும்பில்

பெரிய திருநாட்டில்

நல் நீர்மையால்

(நித்தியகைங்கர்யமாகிற) சிறந்த ஸ்வபாவத்தோடு கூடி

நெடுங்காலம்

சாச்வதாமாக

மகிழ்ந்து வாழ்வார்

பரமாநந்தங்கொண்டு வாழப்பெறுவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கல்நீர = ‘நீர’ என்றது நீர்மையை (ஸ்வாபத்தை) யுடைய என்றபடி.  ‘நீர்மை’ என்னும் பண்புப் பெயரில் ஈறுபோயிற்று; அ – குறிப்புப் பெயரெச்ச விகுதி.  ‘சொல் நீர’ என்பதிலும் இங்ஙனமே கொள்க.  சொல் – கொண்டாடிச் சொல்லப்படுவதை, நீர – இயற்கையாகவுடைய என்றபடி.  “இத்தை யநுஸந்தித்தார்க்கு ‘இதொரு சப்தமே!’ என்று கொண்டாடு மிதுவே ஸ்வபாவமாம்படியிருக்கிற சொல்தொடையை’ என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி.

 

English Translation

The generous as-the-raincloud Mangai-king-Kalikanri has sung this song-garland as offering to the Lord who resides in Naraiyur surrounded by watered groves and fields.  Those who master it will live in great joy on Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top