(1566)

(1566)

ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,

யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த

தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால்,

நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ.

 

பதவுரை

யான் ஆய்

எனக்கு அந்தராத்மாவாய்

என் தனக்கு ஆய்

எனக்கு விதேயனாய்க் கொண்டு

அடியேன் மனம் புகுந்து

அடியேனுடைய மனத்தினுட் பிரவேசித்த

தெனே

தேன்போல் இனியவனே!

தீம் கரும்பின் தெளிவே

இனிமையான கரும்பின் சாறுபோன்றவனே!

நறையூர் நின்ற நம்பீயோ!- ;

ஊன் ஏர் ஆக்கை தன்னை

மாம்ஸமயமான சரீரத்தை

உழந்து

(பலவகைகளாலும்) சிரமப்பட்டு

ஓம்பி வைத்தமையால்

பேணிவைத்துக்கொண்டிருந்ததனால்

என் சிந்தை தன்னால்

என்னுடைய மனத்தினால்

நானே எய்த பெற்றேன்

(இப்போது உன்னை) நானே வந்தடையப்பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  விசித்ரா தேஹஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும் – பூர்வமேவ க்ருதா ப்ரஹமந்! ஹஸ்தபாதாதி ஸம்யுதா” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது; எம்பெருமானுக்கு வழிபாடுகள் செய்தற்காகவே இந்த கரணகளேபரங்கள் தந்தருளப்பட்டன வென்பது அதன் கருத்து; அப்படி பகவத் கைங்கரியத்திற்கே உபகரணமான உடலை நான் பெற்றிருந்தாலும் கீழ்க்கழிந்த காலமெல்லாம் பாழே கழிந்தனவாதலால் அவ்வுடலைக் கொண்டு ஒரு பயனும் பெறா தொழிந்தேன் முன்பெல்லாம்; இவ்வுடலை ச்ரமப்பட்டுப் போஷித்து வந்ததற்குத் தக்கபயன் இன்று பெற்றே னென்கிறார்.  “ஊனேராக்கை தன்னை உழந்தோம்பி வைத்தமையால் நானே எய்தப்பெற்றேன்” என்று அந்வயிப்பது.  மாம்ஸம் மல்கும்படி சரீரத்தைப் பலபரிச்ரமங்கள் பட்டு வளர்த்து வந்தேனாதலால் அதன்பலனை இன்று ஸம்பாதித்துக்கொண்டே னென்கை.  – சரீர மாத்யம் கலுதர்மஸாதநம்” என்கிறபடியே தர்மாநுஷ்டாநத்திற்கு இன்றியமையாத சரீரத்தைப் போஷிக்க வேண்டியது அவசியமே; இதுவரை நான் போஷித்து வந்தது பயன்பெறாதொழிந்தது; இப்போது அங்ஙனன்றியே பயன்பெற்றதாயிற்று என்று மகிழ்ந்து பேசினாராயிற்று.

 

English Translation

I did keep my body flesh for to take and use as fit. By me, for me and with me, you have found a place to be in my heart. Through my contemplation of you, I have held you firmly in me. Sweet as honey, sugarcane juice Naraiyur Lord-in-residence, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top