(1332)
தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய்,எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.
பதவுரை
|
இந்தளூரீர் |
– |
திருவிந்தளூர்ப் பெருமாளே! |
|
நீர் |
– |
தேவரீர் |
|
தீ எம் பெருமான் |
– |
தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும் |
|
நீர் எம் பெருமான் |
– |
ஜலதத்வத்திற்கு அந்தர்யாமியான பெருமானாயும் |
|
திசை எம்பெருமான் ஆயும் இருநிலன் எம்பெருமான் ஆகியும் நின்றால் |
– |
திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும் நின்றால் |
|
அடியோகம் காணோம் |
– |
(அஜஞரான) அடியோங்கள் தேவரீரைக் காணமாட்டாதவர்களாயிருக்கிறோம்; |
|
ஆல் |
– |
ஐயோ!; |
|
தாய் எம்பெருமான் தந்தை தந்தை ஆவீர் |
– |
தாயாகவும் ஸ்வாமியாகவும் பிதாவுக்கும் பிதாவாகவும் இருக்கின்ற பெருமானே! |
|
நீர் அடியோ முக்கே எம்பெருமான் அல்லீரோ |
– |
தேவரீர் எமக்கே அஸாதாரணரான ஸ்வாமியல்லவோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நீர்வானம் மண்ணொரிகாலாய்நின்ற நெடுமால்” என்றும் “குன்றமும் வானும் மண்ணுங் குளிர்புனல் திங்களோடு நின்றவெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாயவெந்தை” என்றும் நாம் கண்ணால் காண்கிற பொருள்களெல்லாம் எம்பெருமான் வடிவேயென்று இவர் துணிந்திருப்பவராதலால், ‘இத்துணிவு இல்லாதவரன்றோ வருந்தவேண்டும்; இத்துணிவுடையார்க்கு எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் எப்போதும் குறையற்றிரக்கின்றதன்றோ; ஆகையாலே இவர் வீணாக வருந்துகின்றார்’ என்று திருவிந்தள்ளூர்ப்பெருமான் திருவுள்ளம் பற்றி யிப்பதாகக்கொண்டு, பிரானே! நி எல்லாப்பொருளுமாக நிற்கின்றாய் என்கிற சாஸ்த்ரார்த்தம் அடியோமுக்குத் தெரியாமையில்லை; “சங்கும் சக்கரமும் சிரித்தமுகமும் தொங்கும் பதக்கங்களும்;” என்றாற்போலே அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ வேஷத்தைக் கண்டகளிக்க ஆவல்கொண்டிருக்கிற அடியோமுக்கு ஜகத் ஸ்வரூபனாயிருக்குமிப்பு என்ன பயனளிக்கும்? தீ நீர் முதலானவையெல்லாம் உன்வடிவே என்று அநுஸந்தித்துக்கொள்வதில் யாதொரு ஆக்ஷேபமுமில்லை. அப்படி அநுஸந்திப்பதனால் அவற்றில் உனது அஸாதாரணத் திருமேனியைக் காண்போமோ. யாம்; காணமாட்டோம்; நாங்கள் கண்டுகளிப்பதற்கன்றோ நீ திருவிந்தளூரிலே வந்து நிற்கிறது என்கிறார்.
அடியோமுக்கே எம்பாருமானல்லீரோ நீர் – பரலாஸுதேவனாயிருக்கு மிருப்பு நித்ய முக்தர்களின் அநுபவத்திற்காக. வியூஹ நிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள் அக்காலத்தி லிருந்தவர்கட்கா யொழிந்தன. ஆந்தர்யாமியா யிருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் போல்வார்க்குப் பயனளிக்கும். அர்ச்சாவதார நிலையொன்றே அடியோங்களுக்கு ஜீவனம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காகவேயன்றோ இது ஏற்பட்டது. குருடர்க்கு ஏற்பட்ட இடத்திலே விழிகண்ணர் புகுரலாமோ? வுரிழிகண்ணர்க்கு ஏற்பட்ட இடம் குருடர்க்கு உதவுமோ?.
English Translation
“Lord who swallowed all the worlds and brought them out in time again!” “Lord of dark adorable hue, like the ocean, -deep in a sleep!” “Dancing, set-fish fields in Nangai, “Deva-deva’s paradise!”, speech-of-milk-and-nectar sweet, my daughter sings of Parttan-Palli O!
