(1400)

(1400)

ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும்,

தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்

தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்

ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே,

 

பதவுரை

அன்று

வராஹகல்பத்தின் தொடக்கத்தில்

ஏன் ஆகி உலகு இடந்து

மஹாவராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியை (அண்டபித்தியில் நின்றும் குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்)

இரு நிலனும் பெரு விசும்பும் தான் ஆய பெருமானை

விசாலமான மண்ணுலகமும் பரந்த விண்ணுலகமும் தனக்கு உடலாக இருக்கப்பெற்ற ஸ்வாமியாயும்,

தன் அடியார் மனத்து

தன் அடியவர்களது நெஞ்சிலே

என்றும் தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை

எப்போதும் தேன்போலவும் அமிருதம் போலவும் விளங்குமவனாயும்,

ஒருகால்

முன்பொருகாலத்திலே

மகிழ்ந்து

திருவுள்ள முவந்து

ஆன் ஆயன் ஆனானை

பசுக்களை மேய்க்குமிடையனாய்ப் பிறந்தவனாயுமுள்ள எம்பெருமானை

கண்டது தென் அரங்கத்தே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பூமியை ஹிரண்யாக்ஷனென்னு மசுரன் பாயாகச் சுருட்டிக் கவர்ந்துபோனதும் ஒன்றுண்டு; பிரளய வெள்ளம் கொள்ளை கொண்டுபோனதும் ஒன்றுண்டு, பிந்திய வரலாறே பெரும்பாலும் ஆழ்வார்கள் அநுஸந்திப்பதாம்.  மேல் எட்டாம் பத்தில் “பாராரளவும் முது முந்நீர்ப்பரந்த காலம் வளைமருப்பில், ஏராரூருவத்தேன மாயெடுத்த வாற்றலம்மானை” (8-8-3). என்ற பாசுரத்தினால் இது விளங்கும்.

 

English Translation

The Lord who came as a boar and took the Earth and sky as his, the Lord who is always sweet-as-ambrosia to his devotees, the Lord who grazed cows heartily in the yore, -I have seen him in Southern Arangam amid cool waters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top