(1266)

(1266)

இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,

குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,

மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

 

பதவுரை

இந்து வார் சடை ஈசனை பயந்த

சந்திரனோடுகூடி நீண்டிருக்கிற சடைமுடியையுடைய ருத்ரனை ஸ்ருஷ்டித்த

நான் முகனை

பிரமனை

தன் எழில் ஆரும் உந்திமா மலர்மீமிசை படைத்தவன்

தன்னுடைய அழகு திருநாபிக் கமலத்திலே பொருந்திய உண்டாக்கின பெருமான்

உகந்து இனிது உறை கோயில்;

மந்தி

பெண் குரங்கானது

குந்தி

குந்திக்கொண்டு

வாழையின் கொழு கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய்

நல்ல வாழைப் பழங்களை புஜித்து தன்து குட்டியை அணைத்துக் கொண்டு அங்கு நின்றும்போய்

மாம்பணைமேல் வைகும் நாங்கூர்

மாமரக் கிளைகளின் மேல் தங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில்

வண்புருடோத்தமம்

 

English Translation

The crescent-decked mat-haired Siva was created by Brahma-on-a-lotus, who in turn was created by our Lord on his navel.  He resides of Nangur, -where monkeys sit and eat bananas from fertile plantation; then take their young ones to their bosom, and go to sleep on the thick branches of the Mango tree, -In the temple of Van-Purushottamam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top