(1265)
வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க
மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
பதவுரை
|
வாளை ஆர்தட கண்உமை பங்கன் |
– |
மீன்போன்ற விசாலமான கண்களை யுடையளான பார்வதியைத் தன் சரீரத்தின் ஒருபக்கத்தில் உடையனான ருத்ரனுடைய |
|
வல் சாபம் அது நீங்க முன் |
– |
வலிய சாபம் தொலையும்படியாக, முன்பொரு காலத்தில் |
|
மூளை ஆர் சிரத்து ஐயம் அளித்த |
– |
வெறும் எலும்பான தலையோட்டிலே பிக்ஷையளித்த |
|
எம் முகில் வண்ணன் |
– |
நீலமேக நிறத்தனான எம்பெருமான் |
|
பாளை |
– |
பாளைகளை யுடைத்தாய் |
|
வான் |
– |
ஓங்கியிருந்துள்ள |
|
கமுகு ஊடு |
– |
பாக்கு மரங்களினிடையே |
|
உயர் |
– |
உயர்ந்திருக்கின்ற |
|
தெங்கின் |
– |
தென்னை மரங்களினுடைய |
|
வன் பழம் |
– |
பெரிய காய்கள் |
|
விழ |
– |
(குளத்தில்) விழ |
|
வாளை வெருவி போய் பாய் |
– |
(அங்குள்ள) மீன்கள் அஞ்சி அவ்விடத்தை விட்டுப் போய் வேறிடத்தில் குதித்துச் சேரப்பெற்ற |
|
தடம் சூழ்தரு நாங்கூர் |
– |
தடாகங்களினால் சூழப்பட்ட திருநாங்கூரில் |
|
வண்புருடோத்தமம் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பாக்குச் சோலைகளின் நடுவே தென்னைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன; அவற்றினின்று பெருத்த காய்கள் இற்றுக் குளங்களிலே விழுகின்றன; அவற்றின் கடுமையான ஓசையைக் கேட்டவாறே மீன்கள் ‘தங்களை இரையாகக் கொள்வதற்கு ஏதோவொன்று வந்து குதித்துவிட்டது’ என்று பிரமித்து வேறிடந்தேடித் துள்ளித் தாவுகின்றனவாம். எம்பெருமானிடத்தில் அஸ்தாநே பயசங்கை பண்ணிக் கலங்கும் பரிலர்களின்படிக்குப் போலியென்னலாம்.
English Translation
Siva, -who bears his wide eyed Dam Parvati on his one half, -was cursed to carry the skull of Brahma as a begging bow! In this hand. Out benevolent cloud-hued Lord filled it with the sap-of-his-heart blood and rid him of the curse. He resides at Nangur, -where Areco trees grow fall, with coconut trees in between; the coconut drops from the tree, into the lake where startled the fish jump and dance, – in the temple of Van-Purushottamam.
