(1267)

(1267)

மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,

பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்

எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே.

 

பதவுரை

மண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர்

பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள

வண்புருடோத்தமத்துள்

வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற

அண்ணல்

ஸ்வாமியினுடைய

சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்

திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும்

ஆலி மன் –

திருவாலி நாட்டுக்குத் தலைவரும்

அருள் மாரி

கிருபையை வர்ஷிக்கும்மேகமா

-யுள்ளவருமான திருமங்கையாழ்வார்

பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இப்பத்தும் வல்லார்

கானத்திலே பொருந்தும்படி பாடின பாசுரமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள்

உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று

இவ்வுலகின்கண் அளவற்ற மஹாநந்தங்களை அநுபவித்து (பிறகு)

இமையவரோடும் கூடுவர்

நித்யஸூரிகளோடும் கூட்டி வாழப் பெறுவர்.

 

English Translation

World renowned Vedic seers live in Nanguru’s Van-Purushottamam where the benevolent king of Tiruvali offered worship with this garland of sweet Tamil Pann-based songs. Those who master it will live on Earth in great joy and join the celestials as well.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top