(1260)

(1260)

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்

உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,

கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,

வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

 

பதவுரை

அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு அது எல்லாம்

இடையர்கள் தேவேந்திரனுக்குப் பலியிட வேண்டுமென்று சமைத்த சோற்றை முழுவதும்

உண்டு

அமுது செய்தவனாயும்

கோ நிரை அவை மேய்த்து காத்தவன்

பசுக்கூட்டங்களை மேய்த்து ரக்ஷித்தவனாயுமுள்ள பெருமான்

உகந்து இனிது உறை கோயில்;

குளிர் வார் பொழில்

குளிர்ந்து பரந்த சோலைகளிலே,

கொண்டல் ஆர் முழவில்

மேகங்களினுடைய மிக்க கோஷம்உண்டாகும் போது

குலம் மயில் நடம் ஆட

கூட்டங் கூட்டமான மயில்கள் கூத்தாடப் பெற்றதும்,

வண்டு இசைபாடிடு

வண்டுகள் (மயில்களின் கூத்தாட்டத்திற்குத் தகுதியாக) இசைபாடப் பெற்றதுமான

நாங்கூர்

திருநாங்கூரில்

வண்புருடோத்தமம்

 

English Translation

The Lord who gulped all the food-offering, –that the cowherd-folk had made for Indra, — then lifted a mount to protect the cows, resides at Nangur, –amid groves resounding with the bees sing and the peacocks dance, –in the temple of Van-Purushottamam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top