(1136)

(1136)

பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின்,

மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய்,

பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

 

பதவுரை

முன்னே ஒருகால்

முன்னொருகால்

பிறைவாள் உடை நுதல் பின்னைதிறத்து

சந்திர கலைபோன்று ஒளியையுடைத்தான  நெற்றியையுடையளான நப்பின்னைக்காக

உருமின்

இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய்

மறை உடை

எதிர்த்து வருகையை யுடையவைகளான

மால் விடை ஏழ்

பெரிய ஏழு ரிஷபங்களை

செருவில்

போர்க்களத்தில்

அடர்த்தாற்கு

வலியடக்கின பெருமானுக்கு

இடம்

இருப்பிடமாவது

தடம் சூழ்ந்து அழகாய கச்சி

கறை உடை வாள்

ரத்தக்கறை மாறாத வாளை யுடையவர்களும்

மறம்

த்வேஷமுடையவர்களுமான

மன்னர்

எதிரரசர்க்ள

கெட

முடிந்துபோம்படியக

கடல்போல் முழங்கும் குரல்

கடல்போலே கோஷம் செய்கிற குரலையுடைய

கடுவாய்ப் பறை உடை

கடுவாய்ப்பறையை உடையவனான

பல்லவர் கோன்–;

பணிந்த–;

பரமேச்சுர விண்ணகரம் அதுவே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உருமு – ‘உரும்’ என்றாலும் ‘உருமு’ என்றாலும் இடிக்குப் பெயர்:  இலக்கணையால் இடி போன்ற குரலைச் சொல்லுகின்றதிங்கெனக் கொள்க.

கடுவாய்ப்பறையுடை – பல்லவராஜனிடமிருந்த பறைக்கு—-‘கடுவாய்ப்பறை’ என்று பெயர்வழங்கி வந்ததாகச் சில செப்பேடுகளிற் காண்கிறது.

 

English Translation

For the sake of the moon-faced Nappinnai, the Lord fought seven strong bulls. He resides in beautiful Kanchi surrounded by water tanks. Our Pallava king has war-drums that roll like the roaring seas, dispatching enemy kings to the sharp edge of his mighty sword. He comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top