(1097)

(1097)

படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,

தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,

கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,

திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ.

 

பதவுரை

படம் நாகம் அணை கிடந்து

படங்களையுடைய சேஷசயனத்திலே பள்ளிகொள்பவனும்

அன்று

முன்பொருகால்

அவுணர் கோனை படவெகுண்டு

அசுரர் தலைவனான இரணியனை முடியும்படி சீறினவனும்

மருது இடை போய்

இரட்டை மருதமரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனும்

பழனம் வேலி

நீர் நிலங்களைச் சுற்றிலுமுடைத்தாய்

தடம் ஆர்ந்த

தடாகங்கள் நிறையப்பெற்றதான

கடல்மல்லை தலசயனத்து

திருக்கடல்மல்லையிலே

தாமரை கண்துயில் அமர்ந்த

தாமரைபோன்ற திருக்கண்கள் துயில்கொண்டிராநின்ற

தலைவர் தம்மை

ஸ்வாமியுமான தலசயனத்துறைவாரைப் பற்றி,

கடம் ஆரும் கருகளிறு வல்லான்

மதம்மிக்க பெரிய யானையை நடத்தவல்லவரும்

போர் வெல்

யுத்தத்திலே வெற்றி பெறுமவருமான

கலிகன்றி

திருமங்கையாழ்வார்

ஒலிசெய்த

அருளிச்செய்த

இன்பம்

இன்பம் விளைக்கவல்ல

இவை ஐந்து ஐந்து பாடலும்

இப்பத்துப் பாசுரங்களையும்

திடம் ஆக

உறுதியாக

வல்லார் தாம்

ஓதவல்லவர்கள்

தீவினையை

பாவங்களை

முதல் அரிய வல்லார்

வேரறுக்க வல்லவராவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

“திடமாக” என்பதனை “ஐந்து மைந்தும் வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்’ “தீவினையை  முதலரிய வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்; பிந்தின அந்வயத்தில்; நிச்சயமாகப் பாவத்தைப் போக்கிக்கொள்ளுவர்கள் என்றபடி.

 

English Translation

The Lord reclines on a hooded snake; he showed his wrath on the Asura king Hiranya. He went between the twin Marudu trees. He reclines in Talasayanam at kadal Mallai. The victorious battle-elephant-riding Kalikanri has sung his praise in ten sweet Tamil songs. Those who master it will be able to rid themselves of their Karmas on their own.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top