(1097)
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ.
பதவுரை
|
படம் நாகம் அணை கிடந்து |
– |
படங்களையுடைய சேஷசயனத்திலே பள்ளிகொள்பவனும் |
|
அன்று |
– |
முன்பொருகால் |
|
அவுணர் கோனை படவெகுண்டு |
– |
அசுரர் தலைவனான இரணியனை முடியும்படி சீறினவனும் |
|
மருது இடை போய் |
– |
இரட்டை மருதமரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனும் |
|
பழனம் வேலி |
– |
நீர் நிலங்களைச் சுற்றிலுமுடைத்தாய் |
|
தடம் ஆர்ந்த |
– |
தடாகங்கள் நிறையப்பெற்றதான |
|
கடல்மல்லை தலசயனத்து |
– |
திருக்கடல்மல்லையிலே |
|
தாமரை கண்துயில் அமர்ந்த |
– |
தாமரைபோன்ற திருக்கண்கள் துயில்கொண்டிராநின்ற |
|
தலைவர் தம்மை |
– |
ஸ்வாமியுமான தலசயனத்துறைவாரைப் பற்றி, |
|
கடம் ஆரும் கருகளிறு வல்லான் |
– |
மதம்மிக்க பெரிய யானையை நடத்தவல்லவரும் |
|
போர் வெல் |
– |
யுத்தத்திலே வெற்றி பெறுமவருமான |
|
கலிகன்றி |
– |
திருமங்கையாழ்வார் |
|
ஒலிசெய்த |
– |
அருளிச்செய்த |
|
இன்பம் |
– |
இன்பம் விளைக்கவல்ல |
|
இவை ஐந்து ஐந்து பாடலும் |
– |
இப்பத்துப் பாசுரங்களையும் |
|
திடம் ஆக |
– |
உறுதியாக |
|
வல்லார் தாம் |
– |
ஓதவல்லவர்கள் |
|
தீவினையை |
– |
பாவங்களை |
|
முதல் அரிய வல்லார் |
– |
வேரறுக்க வல்லவராவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
“திடமாக” என்பதனை “ஐந்து மைந்தும் வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்’ “தீவினையை முதலரிய வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்; பிந்தின அந்வயத்தில்; நிச்சயமாகப் பாவத்தைப் போக்கிக்கொள்ளுவர்கள் என்றபடி.
English Translation
The Lord reclines on a hooded snake; he showed his wrath on the Asura king Hiranya. He went between the twin Marudu trees. He reclines in Talasayanam at kadal Mallai. The victorious battle-elephant-riding Kalikanri has sung his praise in ten sweet Tamil songs. Those who master it will be able to rid themselves of their Karmas on their own.
