(1092)
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பதவுரை
|
திரி சகடம் |
– |
உருளுகிற சகடமானது |
|
பாறி |
– |
சின்னபின்னமாகச் சிதறி |
|
வீழ |
– |
விழும்படி |
|
பாய்ந்தானை |
– |
திருவடியாலுதைத்தவனும் |
|
பாலகன் ஆய் |
– |
சிறுபிள்ளையாய் |
|
ஆல் இலையில் |
– |
ஆலந்தளிரிலே |
|
பள்ளி இன்பம் ஏய்ந்தானை |
– |
திருக்கண்வளர்தலாகிற ஸுகத்தை அநுபவித்தவனும் |
|
இலங்கு ஒளி சேர் |
– |
மிக்க ஒளியை யுடைத்தான |
|
மணி குன்று அன்ன |
– |
ரத்னமயமான பர்வதம் போன்றவனும் |
|
மால் வரை |
– |
பெரிய மலைபோன்ற |
|
ஈர் இரண்டு தோள் எம்மான் தன்னை |
– |
நான்கு திருத்தோள்களையுடைய ஸ்வாமியானவனும் |
|
நிலம் மகள் தோள் தோய்ந்தானை |
– |
பூமிப்பிராட்டியின் தோளோடே அணைந்தவனும் |
|
தூதின் சென்று |
– |
(பாண்டவர்களுக்குத்) தூது செய்யுந் தொழிலுடனே (துரியோதனனிடம்) எழுந்தருளி |
|
பொய் அவ் அறை வாய்புக பெய்த |
– |
(அத்துரியோதனன்) க்ருத்ரிமமாகச் செய்துவைத்த அந்த நிலவறையி னுள்ளே நிறுத்தப்பட்டிருந்த |
|
மல்லர் |
– |
மல்லர்கள் |
|
மங்க |
– |
முடியும்படி |
|
காய்ந்தானை |
– |
சீற்றங்காண்டவனுமான |
|
எம்மானை |
– |
எம்பெருமானை |
|
கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்-. |
||
English Translation
He smote the cart and broke it, he slept as a child on a fig leaf in Yogic trance; he has four radiant mountain-like arms that embrace the lotus-dame Lakshmi. He went as a messenger to Duryodhana and destroyed many mighty kings. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.
