(1062)

(1062)

பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல்,

சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்,

நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி,

ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே.

 

பதவுரை

பண்டு

முன்பொரு காலத்தில்

பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு

சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து

ஆல் இலை மேல்

ஆலந்தளிரின் மேலே

சால நாளும்

வெகு நாள் வரையில்

பள்ளி கொள்ளும்

சயனித்திருந்த

தாமரை கண்ணன்

புண்டரீகாக்ஷன்,

எண் இல் நீலம்;

எண்ணிறந்த நெய்தற் பூவிலே

ஆர்

படிந்த

வண்டு

வண்டுகள்

உண்டு

(அப்பூக்களிலுள்ள தேனைப்)பருகி

வாழும்

வாழப்பெற்ற

அம் தண்

அழகிய குளிர்ந்த

நெய்தல் கழனி

நெய்தல் கழனிகளையும்

ஏலம் நாறும்

பரிமளம் கமழ்கின்ற

பை புறவில்

பரந்த சோலைகளையுமுடைய

எவ்வுள்

திருவெவ்வுளூரிலே

கிடந்தான்

சயனித்திருப்பவன்.

 

English Translation

The Lord with matchless lotus-eyes lay sleeping as a child on a fig leaf during the deluge, with the seven worlds in his stomach.  Amid cool groves with lakes abounding in lotuses from which dark bumble-bees slip nectar, the Lord reclines in Evvul.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top