(1062)
பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே.
பதவுரை
|
பண்டு |
– |
முன்பொரு காலத்தில் |
|
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு |
– |
சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து |
|
ஆல் இலை மேல் |
– |
ஆலந்தளிரின் மேலே |
|
சால நாளும் |
– |
வெகு நாள் வரையில் |
|
பள்ளி கொள்ளும் |
– |
சயனித்திருந்த |
|
தாமரை கண்ணன் |
– |
புண்டரீகாக்ஷன், |
|
எண் இல் நீலம்; |
– |
எண்ணிறந்த நெய்தற் பூவிலே |
|
ஆர் |
– |
படிந்த |
|
வண்டு |
– |
வண்டுகள் |
|
உண்டு |
– |
(அப்பூக்களிலுள்ள தேனைப்)பருகி |
|
வாழும் |
– |
வாழப்பெற்ற |
|
அம் தண் |
– |
அழகிய குளிர்ந்த |
|
நெய்தல் கழனி |
– |
நெய்தல் கழனிகளையும் |
|
ஏலம் நாறும் |
– |
பரிமளம் கமழ்கின்ற |
|
பை புறவில் |
– |
பரந்த சோலைகளையுமுடைய |
|
எவ்வுள் |
– |
திருவெவ்வுளூரிலே |
|
கிடந்தான் |
– |
சயனித்திருப்பவன். |
English Translation
The Lord with matchless lotus-eyes lay sleeping as a child on a fig leaf during the deluge, with the seven worlds in his stomach. Amid cool groves with lakes abounding in lotuses from which dark bumble-bees slip nectar, the Lord reclines in Evvul.
