(1063)

(1063)

சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,

ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,

மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-

தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

 

பதவுரை

தொண்டர்

அடியவர்கள்

மிண்டி

நெருக்கமாகத் திரண்டு

நம்பி சோத்தம் என்று  தொடர்ந்து அழைக்கும்

‘ஸ்வாமீ! உனக்கு அஞ்சலி’ என்று சொல்லிப் பின் தொடர்ந்து துதிக்கப் பெற்ற

ஆத்தன்

ஆப்தனான

நம்பி

ஸ்வாமியாய்

செம் கண்

செந்தாமரைக் கண்ணனான

நம்பி ஆகிலும்

ஸ்வாமியுமாய் இருக்கச் செய்தேயும்,

முனிவர்

ஸநகர் முதலிய ரிஷிகள்

தேவர்க்கு எல்லாம்

தேவர்களுக்குள் பெரிய

மூத்த நம்பி முக்கண் நம்பி என்று தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான்

‘பிரமனே! சிவனே!. என்று சொல்லி வணங்கி ஏத்தும் படியாயுள்ள (ஸர்வாந்தர்யாமியான) பெருமான்

எவ்வுள் கிடந்தான்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சப்தவிசேஷம் சோத்தம் என்பதாம்; ‘ஸ்தோத்ரம்’ என்ற வடசொல் சோத்த மெனச் சிதைந்து கிடக்கிறது என்பாருமுளர்.

ஆப்த: என்ற வடசொல் ஆத்தனெனத் திரிந்தது; நம்புதற்குரியவ னென்கை.

 

English Translation

The dear Lord whom devotees throng and incessantly call, “our Lord”, is the lotus-eyed lord, who is also the elder Lord of the celestials, the lord worshipped by the three-eyed Lord and the four-faced lord. He reclines in Evvul.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top