(1058)
காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
பதவுரை
|
காசை ஆடை |
– |
காஷாய வஸ்த்ரத்தினால் |
|
மூடி |
– |
உடம்பை மறைத்துக்கொண்டு |
|
ஓடி |
– |
(பஞ்சவடிக்கு) ஓடிவந்து |
|
காதல் செய்தானவன் |
– |
(பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய |
|
ஊர் |
– |
ஊராகிய இலங்கையானது |
|
நாசம் ஆக நம்ப வல்ல |
– |
நாசமாகும்படி ஸங்கல்பித்த |
|
நம்பி |
– |
பரிபூர்ண சக்தியையுடையவனும் |
|
நம்பெருமான் |
– |
நமக்கு ஸ்வாமியும் |
|
வேயின் அன்னதோள் மடவார் |
– |
மூங்கிலோடு ஒத்த தோள்களையுடைய இடைச்சியர் |
|
இவன் வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற எம்பெருமான |
– |
‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப்பரிஹஸிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான் |
|
எவ்வுள் கிடந்தான் |
– |
திருவெவ்வுளூரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – முன்னிரண்டடிகளால் ஸ்ரீராமாவதார வ்ருத்தாந்தத்தையும், பின்னிரண்டடிகளால் ஸ்ரீக்ருஷ்ணாவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்தித்து, இப்படி ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் செய்தருளின பெருமான்றானே திருவெவ்வுளூரிலே வந்து சாய்ந்தருளா நின்றானென்கிறார்.
காஷாயம் என்ற வடசொல் காசையெனத் திரிந்தது. தானவன்-ஆஸூரப்ரகிருதி.
English Translation
Our Lord decided to destroy the city of Ravana who came disguised as a russet cloth mendicant and sought to make love to Sita. Our very same Lord was also the laughing stock of cowherd girls with bamboo-slender arms, when he was caught stealing butter. He is the Lord reclining in Evvul.
