(969)
முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே.
பதவுரை
| கை தலத்தால் |
– |
ஒரு கையாலே |
| முதுகு பற்றி |
– |
முதுகைப் பிடித்துக்கொண்டும் |
| முன் ஒரு கோல் ஊன்றி |
– |
(மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும் |
| விதிர்விதிர்த்து |
– |
(உடல்) நடுங்கியும் |
| கண் சுழன்று |
– |
(லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும் |
|
(ஆக இப்படிப்பட்ட ஜூகுப்ஸைகளைக் கண்டு) |
||
| இளையவர் |
– |
இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு) |
| அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன் |
– |
“இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே, |
| மது உண் வண்டு |
– |
பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள் |
| பண்கள் பாடும் |
– |
இசை பாடப்பெற்ற |
| வதரி |
– |
ஸ்ரீபதரியை |
| வணங்குதும் |
– |
வணங்குவோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
முதுகுபற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி *
விதிர்விதிர்த்துக் கண்சுழன்று மேற்கிளைகொண் டிருமி *
இதுவென்னப்பர் முத்தவாறென் றிளையவ ரேசாமுன் *
மதுவுண்வண்டு பண்கள்பாடும் வதரி வணங்குதுமே.
***-[முதுகுபற்றி.) கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் பலஹீனத் தால் முதுகு நோகும்; ஒருகையாலே முதுகைப்பிடித்துக்கொள்ள வேண்டிய தாகும் ; முன் பக்கமாக வளைந்து விழாமைக்காக ஒரு தடியை ஊன்றிக்கொள்ள வேண்டியதாகும்; இப்படி இரண்டு பக்கமும் கப்புக்கால் கொடுத்து நடக்கச் செய்தேயும் உடம்பு நடுங்கியும் கண்கள் சுழலமிட்டும் பெரிய த்வனியுண்டாம்படி இருமல் செய்தும் வெகு ஆயாஸம் தோற்ற நடக்க நேருமாகையாலே அந்த கோரமான நிலைமையைக்காணும் மாதர்களெல்லாரும் மோவாய்க்கட்டையில் கையை வைத்துக்கொண்டு ( ஸ்வாமிகளே! நன்றாச்சுது ; இப்படியும் ஒரு கிழத் தனம் வருவதுண்டோ ? உலகில் எல்லாரும் மூப்பதுண்டு; இப்படி மூப்பவர்களை எங்குங்கண்டறியோம் ; இஃது என்ன விசித்திரமான மூப்பு!” என்று சொல்லி ஏளனஞ் செய்வர்கள் ; அப்படிப்பட்ட பரிதாபநிலைமையிலே வதரியை நெஞ் சாலும் நினைக்க ப்ராப்தி இராது; ஆகையாலே, அப்படிப்பட்ட கிழத்தனம் வருதற்கு முந்தியே கரணகளே பரங்கள் பூர்ணசக்தியோடு இருக்கும் கிளரொளி யிளமையில்தானே பரமபோக்யமான வதரியை வணங்குதல் நன்று என்றாரா யிற்று தேனைப்பருகின வண்டுகள் களிப்புக்குப் போக்குவீடாக எல்லாப் பண்
களையும் பாடப்பெற்ற வதரியென்றது- “எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே” என்னும்படியான எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவித்து அவ் வநுபவத்தாலுண்டாகிய ஆநந்தத்திற்குப் போக்குவீடாக “—” – ஏதத் ஸாம காயந்நாஸ்தே. ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரீய உபநிஷத்து) என்றபடி ஸாமகாநம் பண்ணிக்களிக்கிற முமுக்ஷக்கள் வாழப் பெற்ற வதரி என்றபடி.
விதிர்விதிர்த்தல் –நடுங்குதல். மேற்கிளைகொண்டிருமி = மேலான கிளை என்று பெரிய த்வனியைச் சொல்லுகிறது; கிழவர்கள் லொக்கு லொக்கென்று இருமும்போது உரத்த ஒலி உண்டாதல் காண்க. ….. ….. …… (உ)
English Translation
Holding a bent back with one hand, leaning on a staff with the other, perspiring profusely, rolling the eyes, coughing loud and shrill; ‘ere young women call “O, this is our Father, old man”, in derision, — bumble bees drink and sing in Panns, — Worship Him in Vadari.
