(947)
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்னசொல்
நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே.
பதவுரை
அன்பன் தன்னை |
– |
ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை |
அடைந்தவர்கட்கு எல்லாம் |
– |
ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும் |
அன்பன் |
– |
பக்தியையுடையரான |
தென்குருகூர் நகர்நம்பிக்கு |
– |
நம்மாழ்வர் விஷயத்திலே |
அன்பன் ஆய் |
– |
பக்தனாயிருந்து கொண்டு |
மதுரகவி சொன்ன சொல் |
– |
மதுரகவி அருளிச்செய்த இத்திவ்வியப் பிரபந்தத்தை |
நம்புவார் |
– |
(தங்களுக்குத் தஞ்சமாகக்) விச்வஸித் திருப்பவர்களுக்கு |
பதி |
– |
வாஸஸ்தாநமாவது |
வைகுந்தம் காண்மின் |
– |
பரமபதமாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நம்மாழ்வார் விஷயத்திலே பரமகபக்தி பரீவாஹமாக வெளிவந்த இக்கண்ணி நுண் சிறுத்தாம்பை மஹாவிச்வாஸத்துடன் ஒதவல்லவர்கள் பரமபதத்திலே போய் ஆழ்வார் திருவடிநிழலிலே வாழப்பெறுவர் என்று பலச்ருதியோடே பிரபந்தத்தை நிகமநஞ் செய்தருளினர்.
“அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லா மன்பன்” என்னுமிவ் வடை மொழி ஆழ்வார்க்குமாகலாம், மதுரகவிகளுக்கும் ஆகலாம். ஆழ்வார்க்கு ஆகும் போது -“பயிலுந் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்” என்றபடி சாதி ஒழுக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சியின்றியே பகவத் பக்திமாத்திரத்தையே பற்றாசாகக்கொண்டு ஸகல பாகவதரிடத்தும் அன்புமிக்க ஆழ்வார் என்றதாகிறது. மதுரகவிகளுக்கு அந்வயித்தால்-பாகவதர் எல்லாரளவிலும் வைத்திருந்த அன்பை ஆழ்வாரொருவரளவிலே மடுத்த மதுரகவி என்று கருத்தாகக் கடவது.
(வைகுந்தவங் காண்மினே.) ஆழ்வாரே உத்தேச்யமாகில் ஆழ்வார் திருநகரியன்றே பதியாகவேணும்; பரமபதத்தைப் பதியாகச் சொல்லுவானேன்? என்னில்; (நம்பிள்ளையீடு) “திருநகரியில் ஆழ்வாராணையும் பொலிந்துநின்ற பிரானாணையும் இருபுரியாயாய்த்துச் செல்லுவது; அங்ஙனன்றியே ஆழ்வாராணையே செல்லும் தேசம் பரமபதமேயிறே: ‘அடியார் நிலாகின்ற வைகுந்தம்’ என்றும், ‘வானவர் நாடு’ என்றுஞ் சொல்லக்கடவதிறே – இத்தால் ஆழ்வார் ஏகபோக ‘ஸாம்ராஜ்யமாக ஆளுகிற பரமபதமே ஆழ்வாரடியார்கட்கு வஸ்தவ்யதேசமாக விதிக்கத்தகு மென்றதாயிற்று.
இங்ஙனன்றியே, வைகுந்தமென்று தனியே ஒரு தேச விசேஷத்தைச் சொன்னபடியன்று; ஆழ்வாரெழுந்தருளி யிருக்குமிட மெதுவோ அதுதான் வைகுந்தம் என்பராம் நம்பி திருவழுதிவளநாடு தாஸர். “ஒராயிரத்துளிப்பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகுந் தம்மூரல்லாம்” (திருவாய்மொழி.) என்றதிறே.
கூரத்தாழ்வான் திருக்குமாரர் பட்டர் திருவவதரித்தபின்பு விண்ணுலகென்றும் மண்ணுலகென்றும் ஒருவாசியின்றி இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒரு போகியாய்த்து என்று நம்பிள்ளை கோஷ்டியில் பலகாலும் ப்ரஸக்தமாமென்பது இங்கு அறியத்தக்கது.
(மதுரகவி) ஆசுகவி, சித்ரகவி, விஸ்தாரகவி, மதுரகவி என்று கவிகள் நால்வகைப்படுவர்; அவர்களுள் இவர் இனிமையாகப் பாடுபவரென்பதுபற்றி மதுரகவியென்று திருநாமம் பெற்றார். இவருடைய பிரபந்தம் ஆழ்வார்கள் அருளிச்செயலோடு சேர்ந்து திவ்யப்ரபந்தமென்ற சிறப்புப்பெயரைப் பெற்றாற் போல இம்மதுரகவிகளும் ஆழ்வார் கோஷ்டியிற் சேர்ந்து மதுரகவியாழ்வார் என்று ஆழ்வார்ப்பட்டம் பெற்றமை உபதேசரத்தினமாலையில் தோன்றும்.
“ஆழ்வார் திருமகளாராண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசராமிவர்கள்” என்றும், “ பாரில் மதியாருமாண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசர் தோன்றிய வூரிங்கு” என்றுமுள்ள பாசுரங்களே நோக்குக. ஆழ்வார்களிற் சிலரைக் குலசேகரப்பெருமாள், பாண்பெருமாள் என்பதுபோல மதுரகவிப்பெருமாள் என்றாருமுளர்; “மனறே புகழுந் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்சென்றே மதுரகவிப்பெருமாள்” (சடகோபரந்தாதி) என்றார் கம்பநாடர்.
English Translation
To those who seek the Lord’s refuge, Madurakavi who took refuge in Ten-Kurugur Nambi’s feet has this to say, “See Vaikunth here!”