(822)

(822)

வண்டுலாவு கோதைமாதர் காரணத்தி னால்வெகுண்டு

இண்டவாண னீரைஞ்ஞூறு தோள்களைத்து ணித்தநாள்

முண்டனீறன் மக்கள்வெப்பு மோடியங்கி யோடிடக்

கண்டுநாணி வாணனுக்கி ரங்கினானெம் மாயனே

பதவுரை

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால்

(மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக
வெகுண்டு

கோபங்கொண்டு
இண்ட

செறித்துவந்த
வாணன்

பாணாகரனுடைய
ஈர் ஐ நூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணித்தநாள்

கழித்தபோது
முண்டன் நீறன்

மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும்
மக்கள்

அவனுடைய குமாரர்களும்
வெப்பு

ஜ்வரதேவதையும்
மோடி

பிடாரியும்
அங்கி

அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்)
ஓடிட

(பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே
கண்டு

பார்த்து
நாணி

(இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு
வாணனுக்கு

பாணாகரன் விஷயத்தில்
இரங்கினான்

கிருபைபண்ணினவன்
எம்மாயனே

ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ருத்ரனானவன் பாணனை ரக்ஷிப்பதாகப் பிரதிஜ்ஜை பண்ணிவைத்து, பரிகாரங்களோடு கூட ரக்ஷிக்க முயற்சியுஞ்செய்து ரக்ஷிக்க முடியாமல் எதிரிகையிலே அவனைக் காட்டிக் கொடுத்துத் தப்பிப்போனபடியாலும், கண்ணபிரான் க்ருபை பண்ணி அவனடைய ஸத்தையை நோக்கினபடியாலும் அந்தச்சிவன் ரக்ஷகனல்லவென்றும் கண்ணபிரானே ரக்ஷகனென்னும் ப்ரத்யக்ஷஸித்தமாயிற்றென்கிறார்.

தன்னுடைய பெண்ணான உஷையானவள் தன் ஆசை தீர அதிருந்தாழ்வானோடு கலவி செய்திருக்கச்செய்தே அதனையுணர்ந்து ஸந்தோஷியாமல் கோபங்கொண்டவனாய் யுத்தத்திலே வந்து மேல்விழுந்த வாணனுடைய ஆயிரத்தோள்களை யறுத்தவக்காலத்தில், மொட்டைத் தலையனும் சம்பலாண்டியுமான சங்கரனும் அவனது புதல்வரான ஷண்முகாதிகளும், ஜ்வரதேவதை, பிடாரி, நாற்பத்தொன்பது அக்நிகளுக்குக் கூடஸ்தனான அக்நி இவர்களும் தங்கள் தங்கள் பிராணனைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்றெண்ணி முதுகுகாட்டி ஓடிப்போக, உயிரிழக்கவேண்டியவனான வாணன் மீது பரமகிருபையைச் செய்தருளி நான்கு தோள்களையும் உயிரையும் கொடுத்தருளினான் எம்பெருமான்; ஆனபின்பு இவன் ரக்ஷகனோ! மற்றையோர் ரக்ஷகரோ? ஆராய்ந்து காண்மின் என்றவாறு. (எக)

English Translation

For the sake of bee-hovering – garland – daughter’s safety keep, the angry Bana came to war with thousand arms that hid from scene. The mat-hair ash-ridden Siva the children and his wife, and Fire, they all escaped the discus’ wrath of cowherd-Lord who showed mercy.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top