(823)
போதில்மங்கை பூதலக்கி ழத்திதேவி யன்றியும்
போதுதங்கு நான்முகன்ம கனவன்ம கஞ்சொலில்
மாதுதங்கு கூறன்ஏற தூர்தியென்று வேதநூல்
ஓதுகின்ற துண்மையல்ல தில்லைமற்று ரைக்கிலே.
பதவுரை
| போதில் மங்கை |
– |
பூமகளான லக்ஷிமியும் |
| பூதலம் கிழத்தி |
– |
பூமிப்பிராட்டியும் |
| தேவி |
– |
தேவிமாராவர்; |
| அன்றியும் |
– |
மேலும் |
| போது தங்குநான் முகன் |
– |
பூவிலே பொருந்திருப்பவனான பிரமன் |
| அவன் மகன் |
– |
பேரனாயிரா நின்றான்; |
| என்று |
– |
இவ்வண்ணமாக |
| வேதம்நூல் |
– |
வேத சாஸ்த்ரம் |
| ஓதுகின்றது |
– |
உரைப்பதானது |
| உண்மை |
– |
ஸத்யம் |
| மகன் |
– |
புத்திரனாயிரா நின்றான்; |
| சொலில் |
– |
மேலும் சொல்லப்புக்கால் |
| மாது தங்கு கூறன் |
– |
ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய் |
| ஏறு அது ஊர்தி |
– |
எருதை வாஹனமாக வுடையனான சிவன் |
| மற்று |
– |
இங்ஙனன்றிக்கே |
| அல்லது |
– |
இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை) |
| உரைக்கில் |
– |
(சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில் |
| இல்லை |
– |
அது அஸத்யம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய பரத்வஹேதுவான பெருமைகளைப் பேசுகிறார். பூவிலே பிறந்த பெரியபிராட்டியாரும்; ஸ்ரீபூமிப்பிராட்டியாரும் தேவிமாராக இருக்கிறார்கள்; நாபிக்கமலத்திலே பிறந்த நான்முகம் புத்திரனாக அமைந்திருக்கிறான்; ஸாம்பமூர்த்தியாய் ஸ்ரூஷபத்வஜனான ருத்திரன் பௌத்திரனாக அமைந்திருக்கிறான் – இது நான் சொல்லும் வார்த்தையல்ல; வேதங்களில் முறையிடப்படும் பொருள் இதுவேயாம். இது யதார்த்தமேயன்றி ப்ரசம்ஸாவாக்யமல்ல. ச்ரிய: பதி என்னுமிடமும் பிரமனுக்குப்பிதா என்னுமிடமும் சிவனுக்குப் பிதாமஹன் என்னுமிடமும் எம்பெருமானுடைய பரத்துவத்தை ஸ்தாபித்துக்கொடுத்து சிவாதிகளுடைய அவரத்வத்தையும் நிலைநாட்டித்தருமென்க.
English Translation
The lotus-lady on his chest and Earthy lady at his feet, are spouses for the lotus-Lord whose navel bears the Maker-Lord. The Lord with lady-half-his-self, — rider of the bull, — Siva is son of Brahma, Vedas quoth, now all the rest is falsity.
