(810)
சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில்
கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா
காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை
காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே.
பதவுரை
| சாலிவேலி |
– |
செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய |
| தண் வயல் தடம் கிடங்கு |
– |
குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன |
| தண் |
– |
குளிர்ந்ததான |
| குடந்தை |
– |
திருக்குடந்தையிலே |
|
மேய எழுந்தருளியிராநின்ற |
||
| கோவலா |
– |
க்ருஷ்ணனே! |
| காலநேமி |
– |
காலநேமியென்ன |
| வக்கரன் |
– |
தந்தவக்ரனென்ன |
| பூபொழில் கோலம் நீடு மாடம் |
– |
புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய் |
| கரன் முரன் |
– |
கொடியவனான முரனென்ன இவர்களுடைய |
| சிரம் அவை |
– |
தலைகளானவை |
| காலனோடு கூட |
– |
யமலோகம் போய்ச் சேரும்படியாக |
| வில்குனித்த |
– |
வில்லை வளைத்த |
| வில் கை |
– |
அழகிய திருக்கையையுடைய |
| வீரனே |
– |
தனி வீரனே! (என்று ஏத்துகிறார்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- காலநேமி யென்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன், வக்கரன் – தந்தவக்ரன்; தத்துவக்த்ரன் என்று சொல்வதுமுண்டு. கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர்செய்த அரசர்களில் இவனொருவன், முரண் = நரகாசுரனுடைய மந்திரி. கரன் என்று ஒரு ராக்ஷணுண்டாகிலும் அவன் இங்கே விவக்ஷிதனல்லன்; அவன் ராமாவதாரத்தில் கொல்லப்பட்டவன்; இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சரிதங்கள் அநுஸந்திக்கப்படுவதால் கரன் என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று. *** என்ற வடசொல் க்ரூரனென்ற பொருளையுமுடையது. “சிரமவை காலனோடுகூட” என்றவிடத்து “அறுத்து” என்றொரு வினையெச்சத்தை வருவித்துக்கொண்டு உரைத்ததுமொன்று.
English Translation
O Cowherd-Lord reclining in Kudandai over cool waters, surrounded by the fields and groves and richly laid-out mansion-homes. You rolled the head of Kalanemi, sent him down the path of Hell. You felled the heads of Vakradanta, and the horrible Mura.
