(810)

(810)

சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில்

கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா

காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை

காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே.

பதவுரை

சாலிவேலி

செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய
தண் வயல் தடம் கிடங்கு

குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன
தண்

குளிர்ந்ததான
குடந்தை

திருக்குடந்தையிலே

மேய எழுந்தருளியிராநின்ற

கோவலா

க்ருஷ்ணனே!
காலநேமி

காலநேமியென்ன
வக்கரன்

தந்தவக்ரனென்ன
பூபொழில் கோலம் நீடு மாடம்

புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய்
கரன் முரன்

கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை

தலைகளானவை
காலனோடு கூட

யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த

வில்லை வளைத்த
வில் கை

அழகிய திருக்கையையுடைய
வீரனே

தனி வீரனே! (என்று ஏத்துகிறார்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காலநேமி யென்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன், வக்கரன் – தந்தவக்ரன்; தத்துவக்த்ரன் என்று சொல்வதுமுண்டு. கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர்செய்த அரசர்களில் இவனொருவன், முரண் = நரகாசுரனுடைய மந்திரி. கரன் என்று ஒரு ராக்ஷணுண்டாகிலும் அவன் இங்கே விவக்ஷிதனல்லன்; அவன் ராமாவதாரத்தில் கொல்லப்பட்டவன்; இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சரிதங்கள் அநுஸந்திக்கப்படுவதால் கரன் என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று. *** என்ற வடசொல் க்ரூரனென்ற பொருளையுமுடையது. “சிரமவை காலனோடுகூட” என்றவிடத்து “அறுத்து” என்றொரு வினையெச்சத்தை வருவித்துக்கொண்டு உரைத்ததுமொன்று.

English Translation

O Cowherd-Lord reclining in Kudandai over cool waters, surrounded by the fields and groves and richly laid-out mansion-homes. You rolled the head of Kalanemi, sent him down the path of Hell. You felled the heads of Vakradanta, and the horrible Mura.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top