(811)
செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று
எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ்
செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.
பதவுரை
| செழும் கொழும் பெரும்பணி |
– |
இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது. |
| பொழிந்திட |
– |
பொழிந்தவளவிலே |
| உயர்ந்த வேய் விழுந்து |
– |
முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து |
| உலர்ந்து எழுந்து |
– |
(பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு |
| எழுந்து |
– |
(அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி |
| விண் புடைக்கும் |
– |
விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய |
| வேங்கடத்துள் |
– |
திருவேங்கடமலையிலே |
| நின்று |
– |
நின்றருளி |
| தேன் |
– |
வண்டுகளானவை |
| எழுந்து இருந்து பொருந்து |
– |
மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற |
| பூ பொழில் |
– |
புஷ்பங்கள் நிறைந்த சோலைகள் |
| தழை கொழும் |
– |
தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய் |
| செழும்கடல் |
– |
செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான் |
| குடந்தையுள் |
– |
திருக்குடந்தையிலே |
| கிடந்த |
– |
திருக்கண்வளர்ந்தருளா நின்ற |
| மால் அல்லையே |
– |
பெருமாள் நீயிறே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நிலையார நின்றான் தன் நீள்கழலே யடைநெஞ்சே” என்று நிலையழகிலே ஈடுபடுவார்க்கும் “கிடந்ததோர் கிடக்கைகண்டு மெங்ஙனம் மறந்து வாழ்கேன்?” என்று சயகத் திருகோலத்திலே ஈடுபடுவார்க்கும் போக்யமாகத் திருவேங்கடமலையில் நின்றருளியும் திருக்குடந்தையில் சாய்தருளியும் போருகிறது. அடியார் பக்கலுள்ள வ்யாமோஹத்தின் காரியமன்றோ வென்கிறார். உலர்ந்து= பணி உரை; எச்சத்திரிபு.
English Translation
You stand in Venkatam the hill where bamboo shoots know how to pray; They drop to ground by dew of night and rise again by heat of Sun. you lie in cool Kudandai plains where bees in blossoms fill the bower; they fly so high and drop again to drink the nectar of the Lord.
