(730)
வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு
என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த கைகேசி தஞ்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே உன்னை நானே
பதவுரை
| எம் இராமாவோ |
– |
ஓ எமது இராமனே! |
| வளம் நகரம் |
– |
அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும் |
| வல் தாளின் இணைவணங்கி தொழுது ஏத்த |
– |
(சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்) வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க |
| மன்னன் ஆவான் நின்றாயை |
– |
அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும் |
| அரி அணை மேல் இருந்தாயை |
– |
சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை |
| நெடுங்கானம் படர போகு என்றாள் |
– |
பெரியகாட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள் |
| நல் மகனே |
– |
நல்ல குமாரனே! |
| நான் |
– |
நான் |
| உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு |
– |
உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக்கேட்டு |
| நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன் |
– |
நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன் என்றது – கல்லைக்கடிக்க நன்றாய் சமைத்தாய் என்பது போன்ற விபரீதலக்ஷணை. இப்படி நான் உன் பக்கல் பெருந்தீங்கு செய்தவிடத்திலும் நீ சிறிதும் குணங்குறைந்தாயில்லை; உன் குணம் மேன்மேல் மிக்கு விளங்கப்பெற்றாய் நானே குணக்கேடுடையனாய் நின்றேன் என்பான் நன்மகனே என்று விளித்தான். புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க. ஈற்றடி இரக்கத்தை நன்கு விளக்கும். போகு – என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது, சிறுபான்மை உயிர்வரக் குற்றியலுகரம் கெடாது பொது விதியால் வகரவுடம்படு மெய் ஏற்று, போகுவென்றாள் என்று நின்றது. இவ்விடத்து இது செய்யுளோசை நோக்கியது. இராமாவோ – ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார். நன்னூலாரும் உன்னை நானிலத்தை ஆள்வித்தேன். இரண்டு செயப்படு பொருள் வந்த வினை என்பர் வடநூலார்.
English Translation
I had thought I would offer worship; seat you on lion throne and crown you king of the city today. Alas your mother Kaikeyi made you roam the forest instead! O My Rama! Assenting to her wishes, well did I bequeath my kingdom to you, my good son!
