(729)
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே.
பதவுரை
| என் காகுத்தன் தன் அடிமேல் |
– |
என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக |
| தாலேலோ என்று உரைத்த |
– |
(கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு) |
| கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் |
– |
கொலைத்தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த வல்லவரும் குடையையுடையவருமான குலசேகராழ்வார் |
| கன்னி நல் மா மதிள் புடை சூழ் கணபுரத்து |
– |
சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே |
| சொன்ன |
– |
அருளிச்செய்த |
| பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும் |
– |
பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும் |
| வல்லார் |
– |
அதிகரிக்க வல்லவர்கள் |
| பாங்கு ஆய பத்தர்கள் |
– |
அமைந்த பக்திமான்களாகப் பெறுவர் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பாங்காய பக்தர்கள் = கௌஸல்யை திருத்தாயாராயிருந்து அநுபவித்தாற்போலவும், இவ்வாழ்வார் பக்தராயிருந்து அநுபவித்தாற்போலவும் பகவதநுபவத்தைப் பெறுவார்களென்க.
English Translation
This decad of Tamil songs by sharp spear-wielding King Kulasekara in the literary genre of Talattu was sung for the Kakutstha Lord Srirama, resident of high stone-walled Kannapuram. Those who master it will be good devotees of the Lord.
