(722)

(722)

தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்

மாமதலாய் மைதிலிதன் மணவாளா! வண்டினங்கள்

காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே

ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ


பதவுரை

தாமரை மேல்

(திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனைபடைத்தவனே

பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய்

தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா

பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள்

வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசைபாடும்

காமரமென்னும் இசையைப் பாடப்பெற்ற
கணபுரத்து

திருக்கண்ணபுரத்திலெழுந்தருளி யிருக்கிற

என் கருமணியே

ஏ மருவும் சிலைவலவா

அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆளவல்லவனே

இராகவனே! தாலேலோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!” என்று சொல்லி “தயரதன்றன் மாமதலாய்!” என்று சொன்னவிது – ஸகல விபூதிக்கும் பிதாவாகிய நீ இவ்விபூதியில் ஒரு பிபீலிகாப்ராயனான தசரதனைப் பிதாவாகக் கொண்டு  ‘அவனுடைய பிள்ளை’ என்னும்படியாக பிறந்த அதிசயம் என்கொல் என வியந்தவாறாம்.

“ஏமருவுஞ்சிலை” = ஏ – எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம். ஆரேனும் பிடிக்கிலும் எய்கையிலே மூட்டும் வில் என்பது கருத்து. வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில் – என்றவாறு இக்கருத்துத் தோன்றவே பெரியாழ்வாரும் சார்ங்கமென்னும் வில் ஆண்டான் றன்னை என்றருளிச் செய்தாரென்க.

English Translation

Sleep, O wielder-of-the-terrible-bow, Raghava, Talelo! O Dark-gem-Lord of Kannapuram where bumble-bees hum songs on Panns! You are the eldest son of the illustrious Dasaratha; you created Brahma on a lotus.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top