(670)

(670)

மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்

பாரி னாரொடும் கூடுவ தில்லையான்

ஆர மார்வ னரங்க னனந்தன்நல்

நார ணன்நர காந்தகன் பித்தனே

பதவுரை

மாரனார்

மன்மதனுடைய
வரிவெம் சிலைக்கு

அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும்

ஆட்பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும்

(இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு

யான் கூடுவது இல்லை-:

ஆரம் மார்வன்

முக்தாஹாரத்தைத்  திருமார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன்

அளவிடமுடியாத ஸ்வரூபஸ்வ பாவங்களையுடையவனாய்
நல் நாரணன்

ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன்

அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
அரங்கன்

ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன்

மோஹமுடையனாயிரா நின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.

English Translation

Nor indeed can I be a subject under the sweet bow of the king-of-love Karma. I am mad for my jeweled Aranga, my eternal Lord Narayana, the destroyer of Hell.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top