(668)
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே
பதவுரை
| மெய்யில் வாழ்க்கையை |
– |
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே |
| மெய் என கொள்ளும் |
– |
பாரமார்த்திகமாகக் கருதுகின்ற |
| இவையம் தன்னொடும் |
– |
இவ்வுலகத்தாரோடு |
| யான் கூடுவது இல்லை |
– |
(இனி) நான் சேர்வதில்லை |
| ஐயனே |
– |
‘ஸ்வாமீ’ |
| அரங்கா |
– |
‘ஸ்ரீரங்கநாதனே!’ |
| என்று அழைக்கின்றேன் |
– |
என்று (பகவந்நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்; |
| என் தன்மாலுக்கே |
– |
என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே |
| மையல் கொண்டொழிந்தேன் |
– |
வ்யாமோஹடைந்திட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
English Translation
I cannot mix with people of the world who consider this corporeal life as real. ”My Lord!”, “My Aranga!” is all I can say. I swoon with infatuation for my Lord Mal.
