(668)

(668)

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்

இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்

ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்

மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே

பதவுரை

மெய்யில் வாழ்க்கையை

ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே
மெய் என கொள்ளும்

பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவையம் தன்னொடும்

இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை

(இனி) நான் சேர்வதில்லை
ஐயனே

‘ஸ்வாமீ’
அரங்கா

‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்

என்று (பகவந்நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன்மாலுக்கே

என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன்

வ்யாமோஹடைந்திட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மெய்யில் வாழ்க்கை =  மெய்  இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.

English Translation

I cannot mix with people of the world who consider this corporeal life as real. ”My Lord!”, “My Aranga!” is all I can say. I swoon with infatuation for my Lord Mal.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top