(602)
கணமா மயில்காள் கண்ணபி ரான்திருக் கோலம்போன்று
அணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே
பதவுரை
| கணம் |
– |
கூட்டமாயிருக்கிற |
| மா மயில்காள்! |
– |
சிறந்தமயில்களே! |
| கண்ணபிரான் |
– |
கண்ணபிரானுடைய |
| திருகோலம் போன்று |
– |
அழகிய வடிவு போன்ற வடிவையுடையீராய்க் கொண்டு |
| அணி மா நடம் பயின்று |
– |
அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி |
| ஆடுகின்றீர்க்கு |
– |
ஆடுகின்ற உங்களுடைய |
| ஆடி |
– |
திருவடிகளிலே |
| வீழ்கின்றேன் |
– |
ஸேவிக்கின்றேன். (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்) |
| பணம் ஆடு அரவு அணை |
– |
படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே |
| பல்பல காலமும் |
– |
காலமுள்ளதனையும் |
| பள்ளி கொள் |
– |
பள்ளி கொண்டருளாநின்ற |
| மணவாளர் |
– |
அழகியமணவாளப் பெருமாள் |
| நம்மை வைத்த பரிசு |
– |
எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம் |
| இது காண்மின் |
– |
இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-சிலமயில்கள் கூட்டங்கூட்டமாக இருந்துகொண்டு கூத்தாடுவதைக்கண்டு தரிக்கமாட்டாதாளாய் ‘இக்கூட்டத்தாடுதலை நிறுத்துங்கள், உங்கள்காலிலே விழுகிறேன்‘ என்கிறாள்.
“நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமால்“ (பெரியாழ்வார் திருமொழி) என்னப்பட்ட எம்பெருமானுக்கு இவை ஸ்மாரகங்களாய்க்கொண்டு நலிகிறபடியால் “கண்ணபிரான் திருக்கோலம்போன்று“ என்கிறாள். அடிவீழ்கின்றேன் – இக்கூத்து ஒழியவேணுமென்று ப்ரபத்திபண்ணுகிறேனென்றபடி.
இப்படி இவள்சொன்னவாறே, அந்தோ! பெரியாழ்வார் திருமகளாகப் பெற்ற பெருமைவாய்ந்த நீ இப்படிச் சொல்லத்தகுமோ? உன்காலிலேயன்றோ நாங்கள் விழக்கடவோம்“ என்று அம்மயில்கள் சொல்வனவாகக்கொண்டு, கூறுகின்றாள். (பணமாடரவணையித்பாதி) “சென்றால்குடையாம் இருந்தால் சிங்காசன்மாம்“ என்றபடி – திருவனந்தாழ்வானை ஸர்வப்ரகாரங்களாலும் அடிமைகொண்டு சிறப்பிக்குமவர் என்னை உங்கள் காலிலே விழும்படிசெய்த பின்பு நான் செய்யலாவதுண்டோ? என்கிறாள்.
“பணவாளரவணை“ என்றும்பாடமுண்டு, அப்பாடத்தில், படங்களையும் ஒளியையுமுடைய அரவு என்க. வாள் – ஒளி.
English Translation
O Flocks of Peacocks sporting my Lord Krishna’s hues! Yes, you are artful dancers; but I fall at your feet, pray stop. The bridegroom sleeps eternally on a hooded serpent. See the plight he has brought on me!
