(446)

(446)

மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்

இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்

சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்

பங்கப் படாதுஉய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

மங்கிய

(ஆத்துமா உருத்தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை

வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்

வியாதிகளே
உமக்கும்

உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை

ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே)
கண்டீர்

(இன்று) பாருஙக்ள்
இங்கு

இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்

(இவர் ) வரவேண்டா, வரவேண்டா

(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை)

எளிது அன்று சுலபமான கரியமன்று;

புகேன்மியா

ஆகையால் இனி இங்கு வரவேண்டா

(எது ஆத்துமா)

எம்மான் அவன்

எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சேரும்

எழுந்தருளியிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்‘

திருக்கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத

பரிபவப்படாமல்
உய்யபோமின்

பிழைத்துப்போங்கள்.

பண்டு அன்று பட்டினம் காப்பு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** என்றபடி வியாதிகளின் அநுபவத்திற்கு ஊழ்வினைகள் ஹேதுவதலால் அவ்வூழ்வினைகளை  விளித்து, ‘மிருத்யுவுக்கும் மிருத்யுவந்தான்’ என்பது போல உங்களுக்கும் ஒரு விலை வந்தது. இனி நீங்கள் உறைப்பான காவல்பெற்ற என்னிடம் தங்க முடியாது; தங்கினால் பரிபவமேபலிக்கம்; வேறிடந்தேடி ஓடினால் பிழைக்கலாம் என்கிறார். மங்கிய வல்லினை- வேறுபடுத்த வொண்ணாதபடி  உருத்தெரியாமல் ஆத்துமாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வினைகாள்! என்னவுமாம்; “சார்ந்தவிரு இல்வினைகள்” என்றது காண்க. பங்கம்- ** மென்வர் ** புகேன்மின் புகேன்மின்’ என்ற அடுக்குத்தொடர் விரைவப்ற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொருசொல், விரைவுபற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொரு சொல், இரண்டு மூன்று நான்கெல்லைமுறை அடுக்கும்’ என்பது நன்னூல்.

English Translation

This is a treasure-house of jewels. Any evil minded rogues there, beware! The wonder Lord who came as a beautiful manikin has fondly come to stay in me permanently. So run, do not tarry. No more like old, the fortress is on guard!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top