(422)
கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப் படையுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம் திருப்ப தியின்மேல்
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்ததமி ழுரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமா னிணையடிக்கீழ் இணைபிரியா திருப்பர் தாமே.
பதவுரை
| கை நாகத்து இடர் கடிந்த |
– |
பெரிய துதிக்கையையுடைய கஜேந்திராழ்வா னுடைய துன்பத்தைப் போக்கின |
| கனல் ஆழி |
– |
ஜ்வலியா நின்றுள்ள திருவாழியாழ்வனை |
| படை உடையான் |
– |
ஆயுதமாகவுடைய எம்பெருமான் |
| கருதும் கோயில் |
– |
விரும்பி எழுந்தருளியிருக்கப்பெற்ற கோயிலாய் |
| தென் நாடும் வட நாடும் தொழ நின்ற |
– |
தென்னாட்டிலுள்ளாரும் வடநாட்டிலுள்ளாரும் ஸேவிக்கும்படி அமைந்த |
| திரு அரங்கம் திருப்பதியின்மேல் |
– |
திருவரங்கமென்னும் திருப்பதி விஷயமாக |
| மெய் நாவன் மெய் அடியான் விட்டு சித்தன் |
– |
மெய்யே சொல்லா நின்ற நாவையுடையரும் பிரயோஜனத்தை விரும்பாது அடிமை செய்பவருமான பெரியாழ்வார் |
| விரித்த தமிழ் |
– |
அருளிச்செய்த இத்தமிழ்ப் பாசுரங்களை |
| உரைக்க வல்லார் |
– |
ஓதவல்லவர்கள் |
| எம்பெருமான் இணை அடி கீழ் |
– |
எனக்குச் சேஷியான பரமபத நாதனுடைய ஒன்றோடொன்றொத்த திருவடிகளின் கீழ் |
| எஞ்ஞான்றும் இணைபிரியாது இருப்பர் |
– |
எந்நாளும் (நித்யமுக்தர்களின் திரளாகிற) துணையைப் பிரியாமல் (அவர்களோடு கூடி) வாழ்ந்திருக்கப்பெறுவர் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழிகற்பார் நலமந்த மில்லாதோர் நாடுபுக்கு
அடியார்கள் குழாங்களை யுடன் கூடி வாழப்பெறுபவர் என்று பலங்கூறியவாறு.
மெய்ந்நாவன்- “பொய்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்” என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது போல; இத்தால் இவரருளிச் செய்யும் பகவத்வைபவம், திருப்பதி வைபவம் முதலியவற்றில் இறையும் பொய்கலசாமை போதருமென்க. மெய்யடியான் அடிமை செய்துவிட்டு ‘தேஹி’ என்று மடியேற்குமவரல்ல ரென்கை.
கை+ நாகம்; கைந்நாகம். மெய்+நாவன். மெய்நாவன்
தாம் எ. அசைச்சொற்கள்
English Translation
This decad by truthful devotee Vishnuchitta sings of the pilgrimage centre of Tiru-Arangam, worshipped by the north and the south, where the discus-wielding-Lord, saviour-of-the-distressed-elephant resides. Those who master it will forever be inseparably united to the lotus feet of the Lord.
