(410)
குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல்
நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே.
பதவுரை
| குன்று ஆடு |
– |
மலையினுச்சியிற்சார்ந்த |
| கொழுமுகில் போல் |
– |
நீர் நிறைந்த மேகம் போலவும் |
| குவளைகள் போல் |
– |
கருநெய்தல் பூப்போலவும் |
| குரை |
– |
ஒலிசெய்யாநின்ற |
| கடல்போல் |
– |
கடல்போலவும் |
| நின்று ஆடு |
– |
(களிப்பாலே) நின்று ஆடாநின்றுள்ள |
| மயில்வாகணம் போல் |
– |
மயில்களின் திரள்போலவும் (இராகின்ற) |
| நிறம் உடைய |
– |
வடிவழகையுடையவனான |
| நெடுமால் |
– |
எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) |
| ஊர் |
– |
திருப்பதியாவது |
| தென்றல் |
– |
தென்றல் காற்றானது |
| குன்று |
– |
(மலய) பர்வதத்திலுள்ள |
| பொழிலூடு |
– |
சோலைகளினிடையிலே |
| அழைத்து |
– |
அழைத்து |
|
(அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு) |
||
| கொடி இடையார் |
– |
கொடிபோன்ற இடையையுடையரான பெண்களினுடைய |
| முலை |
– |
(கலவைச் சாந்தணிந்த) முலைகளை |
| அணவி |
– |
வியாபித்து |
|
(அந்தப் பரிமளத்துடனே) |
||
| மன்றுடு |
– |
நாற்சந்திகளினூடே |
| உலாம் |
– |
உலாவப்பெற்ற மதிள் அரங்கம் என்பது |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நிறம் என்று திருமேனிநிறத்தன்னையே சொல்லிற்றாக்க் கொள்ளில் கண்ட கண் மயிர்க்குச்சி விடும்படியான குளிர்த்திக்கு – நீர்கொண்டெழுந்த காளமேகத்தின் நிறத்தையும், நெய்ப்புக்கு – குவளைப்பூவின் நிறத்தையும், இருட்சிக்கு – கடலின் நிறத்தையும், புசர்ப்புக்கு – மயில் கழுத்தின் நிறத்தையும் உவமைகூறுவதாக நிறமித்துக்கொள்ள வேணும். எம்பெருமான் வடிவுக்கு ஒன்றே உபமாநமாகப் பேராமை இதனால் அத்யத்தக்கது.
English Translation
The breeze blows through the hilly groves, then gently over the breasts of thin-waisted dames, and wanders through the four streets of walled Tiru-Arangam. It is the abode of our Lord of dark laden-cloud hue, dark water-lily-hue, dark deep-ocean hue, and dark dancing peacock hue.
