(410)

(410)

குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல்

நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்

குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி

மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே.

பதவுரை

குன்று ஆடு

மலையினுச்சியிற்சார்ந்த
கொழுமுகில் போல்

நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்

கருநெய்தல் பூப்போலவும்
குரை

ஒலிசெய்யாநின்ற
கடல்போல்

கடல்போலவும்
நின்று ஆடு

(களிப்பாலே) நின்று ஆடாநின்றுள்ள
மயில்வாகணம் போல்

மயில்களின் திரள்போலவும் (இராகின்ற)
நிறம் உடைய

வடிவழகையுடையவனான
நெடுமால்

எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்

திருப்பதியாவது
தென்றல்

தென்றல் காற்றானது
குன்று

(மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு

சோலைகளினிடையிலே
அழைத்து

அழைத்து

(அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு)

கொடி இடையார்

கொடிபோன்ற இடையையுடையரான பெண்களினுடைய
முலை

(கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி

வியாபித்து

(அந்தப் பரிமளத்துடனே)

மன்றுடு

நாற்சந்திகளினூடே
உலாம்

உலாவப்பெற்ற மதிள் அரங்கம் என்பது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நிறம் என்று திருமேனிநிறத்தன்னையே சொல்லிற்றாக்க் கொள்ளில் கண்ட கண் மயிர்க்குச்சி விடும்படியான குளிர்த்திக்கு – நீர்கொண்டெழுந்த காளமேகத்தின் நிறத்தையும், நெய்ப்புக்கு – குவளைப்பூவின் நிறத்தையும், இருட்சிக்கு – கடலின் நிறத்தையும், புசர்ப்புக்கு – மயில் கழுத்தின் நிறத்தையும் உவமைகூறுவதாக நிறமித்துக்கொள்ள வேணும். எம்பெருமான் வடிவுக்கு ஒன்றே உபமாநமாகப் பேராமை இதனால் அத்யத்தக்கது.

English Translation

The breeze blows through the hilly groves, then gently over the breasts of thin-waisted dames, and wanders through the four streets of walled Tiru-Arangam. It is the abode of our Lord of dark laden-cloud hue, dark water-lily-hue, dark deep-ocean hue, and dark dancing peacock hue.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top