(407)

(407)

கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே

ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்

தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து

யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே.

பதவுரை

கீழ உலகில்

பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை

அஸுரர்களை
கிழக்க இருந்து

அடக்கிடந்து
கிளராமே

கிளம்பவொட்டாதபடி

ஆழி விடுத்து திருவாழியாழ்வானை  ஏவி

அவருடைய

அவ்வசுரர்களுடைய
கரு

கர்ப்பனமாக
அழித்த

அழித்தருளினதாலும்
அழிப்பன்

சத்ருக்களைத் தொலைத்தருளுவதையே இயல்பாகவுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்

திருப்பதியாவது:
யாழ்

(வீணையினுடைய ஓசை போன்ற)
இனி ஓசை

இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்

வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு

(மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி

உடம்பை உரசிக்கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி

(அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து

உடம்படங்கலும் அணிந்து கொண்டு

அந்தக் களிப்பிலே

ஆளம் வைக்கும்

தெனதென என்று ஆளத்திவைத்து பணிமிடமான
அரங்கம்

திருவரங்கம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-பாம்புகளானவை புற்றுக்களில் பாங்காகக் கிடந்து  வஸிப்பதுபோல, அசுரர்களும் பாதாளலோகத்தில் பாங்காகக் கிடந்து சிலசில காலங்களில் அங்குநின்றம் போந்து தேவர்களை அடர்த்துப் போர் செய்வார்கள்; அப்போது எம்பெருமான் அத்தேவர்களுக்குத் துணையாய்நின்று அவ்வசுரர்களை அழித்தொழித்தருள்வன்; இவ்வாறு அவ்வசுரர்கள் பலகால் போர்புரிய வருவதையும் அவ்வப்போதுகளிலெல்லாம் தான் அவர்களை ஒழிக்க வேண்டிய வருத்தத்தையும் நோக்கி, அவ்வசுரரைக் கிழங்கோடு களையவேணுமெனத் திருவுள்ளம் பற்றித் தனது திருவாழியைச் செலுத்தி அங்ஙனமே நிறைவேற்றிக் கொண்டானென்பன, முன்னடிகள். (கிழக்கு இருந்து கிளராமே.) மரத்தின் வேரை மாத்திரம் நிறுத்திவிட்டு மற்றபாகத்தை வெட்டினால்,அவ்வேரடியாக மீண்டும் அம்மரம் செழிப்புற்றோங்கி வளரும்; அவ்வேர்தன்னையு மொழித்திட்டால் பின்பு ஒன்றுமின்றி யொழியும்; இவ்வாறே எம்பெருமான் அசுரர்களை ஸமூலோந்மூலகம் பண்ணியருளினானென்க. கிழங்கு – வேரானது: இருந்து- மிகுந்திருந்து கிளராமே- மறுபடியும் முன்போல முளைக்க வொட்டாதபடியென்க. கரு- ***- இதனால் மூலத்தைச் சொல்லியவாறு. அழிப்பன்= வடமொழியில்*** என்ற திருநாமம்போல.

செவிக்கினிய ஸ்வரத்தையுடைய வண்டுகள் திரள்திரளாகக்கூடி, விசாஸோங்முகமான தாழை மடலினுள் வருந்திப்புகுந்து அங்குப்புரண்டு அதிலுள்ள வெண்ணிறக் கண்ணங்களைத் தம் உடலில் அணிந்து கொண்டு, தென, தென என்று ஆளத்திவைத்துப் பாடும்படியைக் கூறுவன- பின்னடிகள். (உரிஞ்சி) நெருக்கமானத்வாரத்தில் நுழைய வேண்டுபோது உடம்பு உராய்தல், இயல்பு. உறிஞ்சுதல் – ஊராய்தல்; தவள வண்ணம்- .,???????? என்ற வடசொல் விகாரம். தாழை மடலினுள் வெளுத்தபொடிகள் உள்ளமை அறிக.

யாழின் , இசை. என்று பிரிப்பதும் ஒக்கும். ஆளம் வைத்தல் – அநக்ஷாரஸமாக இசைத்தல்; ஆலாபனை எனப்படும்.

English Translation

Bumble-bees hum like the Yal, brush against screw pine inflorescences and come out smeared with white pollen and sing Alatti, a celebration of victory for the Lord of Tiru-Arangam. He destroys the Asuras of the nether world by stock, wielding his discus.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top