(406)
பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண் பெறுத்தானூர்
குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்
திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.
பதவுரை
| குரவு |
– |
குரவ மரங்களானவை |
| அரும்ப |
– |
அரும்புவிடா நிற்க |
| கோங்கு |
– |
கோங்கு மரங்களானவை |
| அலரா |
– |
அலரா நிற்க. |
| குயில் |
– |
குளில்களானவை |
| கூவும் |
– |
(களித்துக்) கூவும்படியான |
| குளிர்பொழில் சூழ் |
– |
குளிர்ந்த சோலைகளாலே சூழப்பெற்ற |
| திரு அரங்கம் என்பது |
– |
திருவரங்கமென்னும் திருப்பதியானது; |
| பெரு |
– |
பெருமை பொருந்திய |
|
வரங்கன் அவை வரங்களை |
||
| பற்றி |
– |
பலமாகக் கொண்டு |
| பிழக்கு உடைய |
– |
(தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாகவுடைய |
| இராவணனை |
– |
இராவணனுடைய |
| உரு |
– |
உடலானது |
| அங்க |
– |
சிந்நபிந்நமாம்படி |
| பொருது அழித்து |
– |
போர் செய்து (அவனைத்) தொலைத்த |
| இ உலகினை |
– |
இந்த லோகத்தை |
| கண் பெறுத்தான் |
– |
காத்தருளினவனும் |
| என் |
– |
எனக்குத் தலைவனும் |
| திருமால் |
– |
ச்ரிய: பதியுமான எம்பெருமான் |
| சேர்வு இடம் |
– |
சேருமிடாகிய |
| ஊர் |
– |
திருப்பதியாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற வரங்களினால் தனக்கு எவ்வகையாலும் அழிவு நேராதென்று துணிந்து, நெஞ்சினால் நினைக்கவும் வாயினால் மொழியவு மொண்ணாத பற்பல பிழைகளைச் செய்து உலகத்தையெல்லாம் படவடித்துக்கிடந்து கூப்பிடும்படி பண்ணித் திரிந்த இராவணனைக்கொன்று உலகத்தையெல்லாம் வாழ்வித்தருளின எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்- நித்யவஸந்தமான சோலைகளையுடைய திருவரங்கமென்பதாம். வரம்- தற்சமவடசொல். பிழக்கு- பிழை.
English Translation
Cool groves where Kurava trees sprout buds, Kongu trees spill flowers and cuckoos call all day surround. Tiru-Arangam, the abode of my Lord Tirumal, the guardian of the world. He destroyed the demon king Ravana who performed evil acts with the boons he had received.
