(406)

(406)

பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை

உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண் பெறுத்தானூர்

குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்

திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.

பதவுரை

குரவு

குரவ மரங்களானவை
அரும்ப

அரும்புவிடா நிற்க
கோங்கு

கோங்கு மரங்களானவை
அலரா

அலரா நிற்க.
குயில்

குளில்களானவை
கூவும்

(களித்துக்) கூவும்படியான
குளிர்பொழில் சூழ்

குளிர்ந்த சோலைகளாலே சூழப்பெற்ற
திரு அரங்கம் என்பது

திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு

பெருமை பொருந்திய

வரங்கன் அவை வரங்களை

பற்றி

பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய

(தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாகவுடைய
இராவணனை

இராவணனுடைய
உரு

உடலானது
அங்க

சிந்நபிந்நமாம்படி
பொருது அழித்து

போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை

இந்த லோகத்தை
கண் பெறுத்தான்

காத்தருளினவனும்
என்

எனக்குத் தலைவனும்
திருமால்

ச்ரிய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்

சேருமிடாகிய
ஊர்

திருப்பதியாம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற வரங்களினால் தனக்கு எவ்வகையாலும் அழிவு நேராதென்று துணிந்து, நெஞ்சினால் நினைக்கவும் வாயினால் மொழியவு மொண்ணாத பற்பல பிழைகளைச் செய்து உலகத்தையெல்லாம் படவடித்துக்கிடந்து கூப்பிடும்படி பண்ணித் திரிந்த இராவணனைக்கொன்று உலகத்தையெல்லாம் வாழ்வித்தருளின எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்- நித்யவஸந்தமான சோலைகளையுடைய திருவரங்கமென்பதாம். வரம்- தற்சமவடசொல். பிழக்கு- பிழை.

English Translation

Cool groves where Kurava trees sprout buds, Kongu trees spill flowers and cuckoos call all day surround. Tiru-Arangam, the abode of my Lord Tirumal, the guardian of the world. He destroyed the demon king Ravana who performed evil acts with the boons he had received.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top