(317)
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று
உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
ஐந்தினோ டைந்தும்வல் லார்க்குஅல்ல லில்லையே.
பதவுரை
| நந்தன மதலையை |
– |
நந்தகோபான் குமாரனான கண்ணபிரானையும் |
| காகுத்தனை |
– |
இராமபிரானையும் |
| நவின்று |
– |
(ஒருவர்க்கொருவர் எதிரியாய்நின்று) சொல்லி |
| உந்தி பறந்து |
– |
உந்தி பறக்கையாகிற லீலாரஸங்கொண்டாடின |
| ஒளி இழையார்கள் |
– |
அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப்பெண்களிருவருடைய |
| சொல் |
– |
சொல்லி, |
| செம்தமிழ் |
– |
அழகிய தமிழ்பாஷையாலே |
| தென் புதுமை விட்டு சித்தன் சொல் |
– |
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச்செய்த |
| ஐந்தினோடு ஐந்தும் |
– |
க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப்பத்துப் பாசுரங்கனை |
| வல்லார்க்கு அல்லல் இல்லை |
– |
துன்பமொன்று மில்லையாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பல்சொல்லித் தலைக்கட்டியவாறு.
அடிவரவு:- என்னாதன் என்வில் உருப்பிணி மாற்று பஞ்சவர் முடி காளியன் தார்மாய காரார் நந்தன் நெறிந்த.
English Translation
This decad of pure Tamil songs by Vishnuchitta of Srivilliputtur recalls the Undi Parattal, sing-and swing-the-hips dance of beautiful girls extolling Krishna and Rama alternately. Those who master it shall be free from grief.
