(317)

(317)

நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று

உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்

செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்

ஐந்தினோ டைந்தும்வல் லார்க்குஅல்ல லில்லையே.

பதவுரை

நந்தன மதலையை

நந்தகோபான் குமாரனான கண்ணபிரானையும்
காகுத்தனை

இராமபிரானையும்
நவின்று

(ஒருவர்க்கொருவர்  எதிரியாய்நின்று) சொல்லி
உந்தி பறந்து

உந்தி பறக்கையாகிற லீலாரஸங்கொண்டாடின
ஒளி இழையார்கள்

அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப்பெண்களிருவருடைய
சொல்

சொல்லி,
செம்தமிழ்

அழகிய தமிழ்பாஷையாலே
தென் புதுமை விட்டு சித்தன் சொல்

அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச்செய்த
ஐந்தினோடு ஐந்தும்

க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப்பத்துப் பாசுரங்கனை
வல்லார்க்கு அல்லல் இல்லை

துன்பமொன்று மில்லையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பல்சொல்லித் தலைக்கட்டியவாறு.

அடிவரவு:-   என்னாதன் என்வில் உருப்பிணி மாற்று பஞ்சவர் முடி காளியன் தார்மாய காரார் நந்தன் நெறிந்த.

English Translation

This decad of pure Tamil songs by Vishnuchitta of Srivilliputtur recalls the Undi  Parattal, sing-and swing-the-hips dance of beautiful girls extolling Krishna and Rama alternately. Those who master it shall be free from grief.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top