(315)

(315)

மாயச் சகட முதைத்து மருதிறுத்து

ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்துஅணி

வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற

ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.

பதவுரை

மாயம்

க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான
சகடம்

சகடத்தை
உதைத்து

(திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும்
மருது

இரட்டை மருதமரங்களை
இறுத்து

இற்றுவிழும்படி பண்ணியும், (பின்பு)
ஆயர்களோடு

இடையர்களோடு கூட
போய்

(காடேறப்) போய்
ஆநிரை

பசுக்களின் திரளை
காத்து

ரக்ஷித்தும்
அணி

அழகிய
வேயின் குழல்

வேய்ங்குழலை
ஊதி

ஊதியும்

வித்தகன் ஆய் நின்ற விஸ்மயநீயனாய் நின்ற

ஆயர்கள் ஏற்றினை

இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை  பாடிப்பற

ஆநிரை மேய்த்தானை பாடிப் பற

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இப்பாட்டிற் கூறப்பட்டுள்ள வரலாறுகள் கீழ்ப்பலவிடங்களில் எழுதப்பட்டுள்ளமை அறிக. வேயின் குழல் – வேயினால் (மூங்கினால்) செய்யப்பட்ட குழல் ; முரளி.

English Translation

He smote the bedeviled cart, broke the Marudu trees, went with the cowherds and grazed cows, then played the flute and stood like a wonder. Sing the cowherds’ king and swing. Sing of the cow-grazer and swing.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top