(311)

(311)

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து

நஞ்சுமிழ் நாகம் கிடந்தநல் பொய்கைபுக்கு

அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த

அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.

பதவுரை

பஞ்சவர்

பஞ்சபாண்டவர்களுக்காக
தூதன் ஆய்

(துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்

(அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்)

பாரதம்

பாரத யுத்தத்தை
கை செய்து

அணிவகுத்துச்செய்து,
கஞ்சு உமிழ்

விஷத்தைக் கக்குகின்ற
காகம் கிடந்த

காளியன் கிடந்த
நல்பொய்கை புக்கு

கொடிய மடுவிலே புகுந்து

அஞ்ச (அக்காளியின்) அஞ்சும்படி

பணத்தின் மேல்

(அவனது) படத்திலே
பாய்ந்திட்டு

குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள் செய்த

அப்பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட

அஞ்சனவண்ணனை பாடிப்பற;

அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான்  பாண்டவர்களுக்காகத் தூதுசென்றதும், பின்பு பாரத யுத்தங் கோடித்தததும், காளியன்வலியை அடக்கினதும் கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. காளியனை அடக்கியது முன்னும், பாரதம் கைது செய்தது அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம்முறையைக் கருதாமல் இங்ஙனமருளிச் செய்தாரென்று “கைசெய்து” என்றவிடத்து, கை- தமிழ் உபஸர்க்கமென்பர். நல்பொய்கை- எதிர்மறையிலக்கணை.

English Translation

As messenger for the five, he abetted the war. He went into the lake where a serpent laid spitting venom. He danced on the five hoods and showered his grace. Sing of the dark-hued Lord and swing. Sing of Yasoda’s lion and swing.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top