(252)

(252)

திண்ணார் வெண்சங் குடையாய் திருநாள் திருவோண மின்றேழு நாள்முன்

பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப்பல்லாண்டு கூறு வித்தேன்

கண்ணாலம் செய்யக் கறியும் கலத்த ரிசியும் ஆக்கி வைத்தேன்

கண்ணாநீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம்செய் திங்கேயிரு.

பதவுரை

திண் ஆர்

திண்மைபொருந்திய
வெண் சங்கு

வெண்சங்கத்தை
உடையாய்

(திருக்கையில்) ஏந்தியுள்ளவனே!
கண்ணா

கண்ணபிரானே!
திருநாள்

(நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய
திருஓணம்

திருவோண க்ஷத்திரம்
இன்று

இற்றைக்கு
ஏழுநாள்

ஏழாவது நாளாகும்;

(ஆதலால்,)

முன்

முதல் முதலாக
பண் ஏர் மொழியாரை  கூவி

பண்ணோடே கூடின அழகிய பேச்சையுடைய மாதர்களையழைத்து
முளை அட்டி

அங்குராரோபணம் பண்ணி
பல்லாண்டு கூறுவித்தேன்

மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்;
கண்ணாலம் செய்ய

(திருவோணத்தினன்று) திருக்கல்யாணம் செய்வதற்கு
கறியும்

கறியமுதுகளையும்
அரிசியும்

அமுதுபடியையும்
கலத்தது ஆக்கி வைத்தேன்

பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்;

நீ-;

நாளைத்தொட்டு

நாளை முதற்கொண்டு
கன்றின்பின்

கன்றுகளின் பின்னே
போகேல்

(காட்டுக்குப்) போகவேண்டா;
கோலம் செய்து

(உன் வடிவுக்குத்தக்க) அலங்காரங்களைச் செய்துகொண்டு
இங்கே இரு

இந்த அகத்திலேயே இருக்கக்கடவாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திண்ஆர் – சத்ருநிரஸநத்தில் நிலைபேராமல் நின்று முழங்கும் திண்மையைச் சொல்லுகிறது.  யசோதைப்பிராட்டி கண்ணனைநோக்கி இப்பாசுரஞ் சொல்லியது.  விசாகாநக்ஷத்திரத்தினன்று என்றுணர்க.  பண் – இசைப்பாட்டு.  இற்றைக்கு ஏழாவது நாளாகிய உன் ஜந்மநக்ஷத்திரத்தில் உனக்கு விசேஷமான மங்களகாரியங்களைச் செய்வதற்காக மங்கலப் பாட்டுக்களையும் பாடுவித்தேன்; அன்றைக்கு வேண்டிய வஸ்துக்களையும் இப்போதே ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன்; ஆகையால் இனி நீ சாதித்தொழிலைத் தவிர்ந்து உத்ஸவிக்ரஹம் போல் உன்னை அலங்கரித்துக்கொண்டு இவ்விடத்திலேயே வீற்றிரு என்று யசோதைப்பிராட்டி வேண்டுகின்றாள்.    முளையட்டுதல் – கல்யாணாங்கமாக நவதானியங்களைக் கொண்டு பாலிகை வைக்கை.  கண்ணாலம் – மரூஉமொழி.

English Translation

O Lord wielding the strong white conch! Seven days hence it is Sravanam, your birthday. As a prelude to the celebrations I let the seeds germinate, and called in the beautiful singing-girls to come and sing “Many happy returns”. I have filled the vessels with rice and vegetables. O Krishna, dear-as-my-eyes, from tomorrow do not go after the calves. Stay here, decked for the occasion.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top