(244)
சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ
கோலப் பணைக்கச் சும்கூ றையுடையும் குளிர்முத் தின்கோ டாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோமற் றாரு மில்லை.
பதவுரை
| நங்கைமீர் |
– |
பெண்காள்!, |
| ஒரு காது |
– |
ஒரு காதிலே |
| சீலைக்குதம்பை |
– |
சீலைத்தக்கையையும் |
| ஒரு காது |
– |
மற்றொரு காதிலே |
| செம் நிறம் மேல்தோன்றிப் பூ |
– |
செங்காந்தள் பூவையும் (அணிந்துகொண்டு) |
| கூறை உடையும் |
– |
திருப்பரியட்டத்தின் உடுப்பையும் |
|
(அது நழுவாமைக்குச் சாத்தின) |
||
| கோலம் |
– |
அழகிய |
| பணை |
– |
பெரிய |
| கச்சும் |
– |
கச்சுப்பட்டையையும் |
| குளிர் |
– |
குளிர்ந்திராநின்றுள்ள |
| முத்தின் |
– |
முத்தாலேதொடுக்கப்பெற்று |
| கோடு |
– |
(பிறைபோல்)வளைந்திருக்கின்ற |
| ஆலமும் |
– |
ஹாரத்தையும் |
|
(உடையனாய்க் கொண்டு) |
||
| காலி பின்னே |
– |
கன்றுகளின் பின்னே |
| வருகின்ற |
– |
(மீண்டு)வாராநின்ற |
| கடல் வண்ணன் |
– |
கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய |
| வேடத்தை |
– |
வேஷத்தை |
| வந்து காணீர் |
– |
வந்து பாருங்கள்; |
| ஞாலத்து |
– |
பூமண்டலத்திலே |
| புத்திரனை |
– |
பிள்ளையை |
| பெற்றார் |
– |
பெற்றவர்களுள் |
|
(’நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத்தக்கவள்) |
||
| நானே |
– |
நான் ஒருத்தியேயாவேன்; |
| மற்று ஆரும் இல்லை |
– |
வேறொருத்தியுமில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சீலைக்குதம்பை= ‘போய்ப்பாடுடைய நின்’’ என்ர திருமொழியில் யசோதைப்பிராட்டி கண்ணபிரானை வேண்டியழைத்துக் காதிலிட்ட துணித்திரி. “திரியை யெரியாமே காதுக்கிடுவன்” என்று சொல்லி இட்டாளன்றோ.-இரண்டு காதுகளிலும் அத்திரியை இவள் இட்டனுப்ப, அவன் காட்டிலே ஒருகாதில் திரியைக் களைந்திட்டுச் செங்காந்தள்பூவை அணிந்து கொண்டுவந்தமை அறிக. உடை என்று வஸ்திரத்திற்கும் அதனை உடுத்துதற்கும்பேர். இங்கு இரண்டாவதான தொழிற்பெயரைக் கொள்க. ஆலம்-’ஹாரம்’ என்ற வடசொல் ஆரமெனத் திரிந்து ரகரத்திற்கும் லகரம் போலியாக வந்தது: அன்றிக்கே, ‘கோடாரமும்’ என்றே பாடமாகவுமாம்; அன்றிக்கே, ‘கோடாலம்’ என்றொரு முழுசொல்லாய் முத்துப்பணியைச் சொல்லிற்றாகவுமாமென்பர்-திருவாய்மொழிப்பிள்ளை. வேடம்-வேஷம். பெண்காள்! கச்சுங் கூறையுமாரமுமாக என் கண்ணபிரான் கன்றுமேய்த்து மீண்டு வருகின்ற கோலத்தை வந்து காண்மின்; பிள்ளை என்றால் இவனொருத்தனேயொழிய மற்றைப்பிள்ளைகள் அணிற்பிள்ளை கீரிப்பிள்ளை தென்னம்பிள்ளையேயாமத்தனை; அவற்றைப்பெற்ற தாய்களோடு மலடிகளோடு ஒருவாசியில்லை; ‘புத்ரவதீ’ என்று எனக் கொருத்திக்கே யன்றோ பட்டங்கட்டத்தகும் என்று புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாள்.
English Translation
With the tucks of his turban covering one ear and a bunch of red glory-lily flowers stuck over the other, wearing a beautiful vesture and a waist cloth over it, hanging a crescent of cool pearls on his chest, the ocean-hued Lord returns with the calves. O Ladies, come
