(243)

(243)

என்றும் எனக்குஇனி யானை என்மணி வண்ணனை

கன்றின் பின்போக்கி னேனென்று அசோதை கழறிய

பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன்சொல்

இன்தமிழ் மாலைகள் வல்ல வர்க்குஇட ரில்லையே.

பதவுரை

என்றும்

‘எப்போதும்
எனக்கு

(தாயாகிய) எனக்கு
இனியானை

இனிமையைத் தருமவனாய்
என்

என்னுடைய
மணிவண்ணனை

நீலமணிபோன்ற வடிவையுடையனான கண்ணபிரானை
கன்றி, பின் போக்கினேன் என்று

கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று
அசோதை

யசோதைப்பிராட்டி
கழறிய

(மனம்நொந்து) சொன்னவற்றவை
சொல்

அருளிச் செய்த
பொன்

பொன்மயமாய்
திகழ்

விளங்காநின்றுள்ள
மாடம்

மாடங்களையுடைய
புதுவையர்

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு
கோன்

நிர்வாஹகரான
பட்டன்

பெரியாழ்வாருடைய
இன்

போக்யமான
தமிழ் மாலைகள்

தமிழ்ச்சொல் மாலைகளை
வல்லவர்க்கு

ஓதவல்லவர்களுக்கு
இடர் இல்லை

(ஒருகாலும்) துன்பமில்லையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்றும்-தீம்புசெய்த காலத்திலுமென்க: ‘கழறிய’ என்பதைப் பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயராகக்கொண்டு அதில் இரண்டாம்வேற்றுமையுருபு தொக்கியிருக்கின்ற தென்க.

English Translation

This decad of sweet songs by gold-mansioned Puduvai King Pattarbiran recalls Yasoda’s lament on sending her ever-sweet gem-hued Lord after the grazing calves. Those who master it will have no hardships.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top