(243)
என்றும் எனக்குஇனி யானை என்மணி வண்ணனை
கன்றின் பின்போக்கி னேனென்று அசோதை கழறிய
பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன்சொல்
இன்தமிழ் மாலைகள் வல்ல வர்க்குஇட ரில்லையே.
பதவுரை
| என்றும் |
– |
‘எப்போதும் |
| எனக்கு |
– |
(தாயாகிய) எனக்கு |
| இனியானை |
– |
இனிமையைத் தருமவனாய் |
| என் |
– |
என்னுடைய |
| மணிவண்ணனை |
– |
நீலமணிபோன்ற வடிவையுடையனான கண்ணபிரானை |
| கன்றி, பின் போக்கினேன் என்று |
– |
கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று |
| அசோதை |
– |
யசோதைப்பிராட்டி |
| கழறிய |
– |
(மனம்நொந்து) சொன்னவற்றவை |
| சொல் |
– |
அருளிச் செய்த |
| பொன் |
– |
பொன்மயமாய் |
| திகழ் |
– |
விளங்காநின்றுள்ள |
| மாடம் |
– |
மாடங்களையுடைய |
| புதுவையர் |
– |
ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு |
| கோன் |
– |
நிர்வாஹகரான |
| பட்டன் |
– |
பெரியாழ்வாருடைய |
| இன் |
– |
போக்யமான |
| தமிழ் மாலைகள் |
– |
தமிழ்ச்சொல் மாலைகளை |
| வல்லவர்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
| இடர் இல்லை |
– |
(ஒருகாலும்) துன்பமில்லையாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்றும்-தீம்புசெய்த காலத்திலுமென்க: ‘கழறிய’ என்பதைப் பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயராகக்கொண்டு அதில் இரண்டாம்வேற்றுமையுருபு தொக்கியிருக்கின்ற தென்க.
English Translation
This decad of sweet songs by gold-mansioned Puduvai King Pattarbiran recalls Yasoda’s lament on sending her ever-sweet gem-hued Lord after the grazing calves. Those who master it will have no hardships.
