(216)
தேனுக னாவி செகுத்து பனங்கனி
தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால்
வானவர் கோன்விட வந்த மழைதடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.
பதவுரை
| தேனுகன் |
– |
தேநுகாஸுரனுடைய |
| ஆவி |
– |
உயிரை |
| செகுத்து |
– |
முடிக்க நினைத்த அத்தேனுகனை |
| பனங்கனி |
– |
(ஆஸிராலிஷ்டமான) பனைமரத்தின் பழங்கள் (உதிரும்படியாக) |
| எறிந்திட்ட |
– |
(அந்த மரத்தின் மேல்) வீசியெறிந்த |
| தடப்பெரு தோலினால் |
– |
மிகவும் பெரிய தோலாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து) |
| வானவர் கோன் விடவந்தமழை தடுத்து |
– |
தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து |
| ஆன் நிரை |
– |
பசுக்களின் திரளை |
| காத்தானால் |
– |
ரக்ஷித்தருளின கண்ணபிரானால் |
|
இன்று முற்றும் |
||
| அவை |
– |
அப்பசுக்கூட்டத்தை |
|
இன்று முற்றும் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தேநுகன்-கழுதை வடிவங்கொண்டு கண்ணனை நலிய வந்த அசுரன்; இவ்வரலாற்றை “வானவர் தாம் மகிழ” (1-5-4) என்ற பாட்டின் உரையிற் காண்க. செகுத்து-செகுக்க; எச்சத்திரிபு. பனை+கனி, பனங்கனி; “பனை முன் வலிவரின் ஐ போயமும்” என்ற சிறப்பு விதி காண்க. தான் -அசை. ‘ஆனிரை காத்தானால்’ என்பதனால் அநிஷ்ட நிவர்த்தனமும், ‘அவை உய்யக்கொண்டானால்’ என்பதனால் இஷ்ட ப்ராபனமும் சொல்லப்படுகின்றது; அதாவது- வந்து ஆபத்தை அகற்றி, வயிறு நிரம்பப் புல்லுந்தண்ணீருங் கொடுக்கை.
English Translation
He flung the Asura Dhenuka against a Palm tree and killed him; with strong arms he held a mountain and stopped the rains sent by the king of gods Indra and saved the cows. Today we are finished,–by the Lord who raises cows,–O, We are finished.
