(183)

(183)

கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்

உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்

திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய்

மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

கண்கள்

கண்களானவை
உன்னை கண்டால்

உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள்

கர்ப்பத்தையுடைய  (நீர்கொண்ட) மேகங்களை
கண்டால்

பார்த்தால் (அதை)
ஒக்கும்

ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய்

வடிவையுடையவனே!
உலகு ஏழும்

ஏழுலகங்களும்
உண்டாக

ஸத்தைபெறும்படி
வந்து பிறந்தாய்

திருவவதரித்தவனே!
திருஉடையாள்

(உன்னை) ஸம்பத்தாகவுடைய பிராட்டிக்கு
மணவாளா

நாயகனே!
திரு அரங்கத்தே

கோயிலிலே
கிடந்தாய்

பள்ளி கொண்டிருப்பவனே!
மணம்

வாஸனை
மருவி கமழ்கின்ற

நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப்பூ

மல்லிகைப்பூவை

சூட்டவாராய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற வடியையுடையவனே! உலகங்களுக்கு ஸத்தையுண்டாகும்படி இந்நிலத்தில் வந்து பிறந்தவனே!; திருவாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் திருவாயிருப்பவனே! இந்த மல்லிகைப்பூவின் பரிமளம் குன்றுவதற்கு முன்னே இதைச் சூடவா என்பதாம் ‘ஒக்கும்’ என்பதை முற்றாகக் கொண்டு கருவுடை மேகங்களைக் கண்டால் உன்னைக் காண்பதை ஒத்திருக்கும்: (அதுக்குமேலே) கண்கள் உருவுடையதாய் – கண்ணழகையுமுடையவனே! என்றும் உரைக்கலாம்.

English Translation

O beautiful One! When my eyes see you, they rejoice like they have seen the dark laden clouds. You took birth to redeem the seven worlds. O Bridegroom of the goddess of wealth, Lord reclining in Srirangam! Come, wear these Jasmine flowers of lasting fragrance.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top