(184)
மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்.
பதவுரை
| மச்சொடு மாளிகை ஏறி |
– |
நடுநலையிலும் மேல் நிலையிலும் ஏறிப்போய் |
| மாதர்கள் தம் இடம்புக்கு |
– |
பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து |
| கச்சொடு |
– |
(அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும் |
| பட்டை |
– |
பட்டாடைகளையும் |
| கிழித்து |
– |
கிழித்துவிட்டு |
| காம்பு துகில் அவை |
– |
(மற்றும் அப்பெண்கள் உடுத்துள்ள) கரைகட்டின சேலையையும் |
| கீறி |
– |
கிழித்துப்போட்டு |
|
(இப்படியே) |
||
| நிச்சலும் |
– |
ப்ரதிநத்யம் |
| தீமைகள் |
– |
துஷ்டசேஷ்டைகளை |
| செய்வாய் |
– |
செய்பவனே! |
| நீள் திருவேங்கடத்து |
– |
உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற |
| எந்தாய் |
– |
ஸ்வாமியே! |
| பச்சை |
– |
பசுநிறமுள்ள |
| தமனகத்தோடு |
– |
மருக்கொழுந்தையும் |
| பாதிரிப்பூ |
– |
பாதிரிப்பூவையும் |
|
சூட்டவாராய்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மேல்மாடங்களில் ஏகாந்தமாக வாழ்கின்ற பெண்களிடத்திலும் சென்று அவர்களுடைய கச்சுகளையும் பட்டாடைகளையும் கரைகட்டின சேலைகளையும் கிழித்துத் தீம்பு செய்வதை விட்டிட்டுப் பூச்சூட வரவேணுமென்பதாம். கச்சு – ‘கஞ்சுகம்’ என்ற வடசொற்சிதைவு துகிலவை = அவை ஸ்ரீ முதல் வேற்றுமைச் சொல்லுருபு. நிச்சல் – ‘நித்யம்’ என்ற வடசொல் விகாரம். தமநிகம் – வடசொல்.
English Translation
Climbing up the balcony and rooftops, you enter the ladies’ chamber, then tear up their pleated silk corset and shred their frilled linen. Daily you play such mischief. O My Lord of Tiruvenkatam hills, come wear these Padiri flowers with green Davanam springs.
