(184)

(184)

மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு

கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய்

பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

மச்சொடு மாளிகை ஏறி

நடுநலையிலும் மேல் நிலையிலும் ஏறிப்போய்
மாதர்கள் தம் இடம்புக்கு

பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு

(அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை

பட்டாடைகளையும்
கிழித்து

கிழித்துவிட்டு
காம்பு துகில் அவை

(மற்றும் அப்பெண்கள் உடுத்துள்ள) கரைகட்டின சேலையையும்
கீறி

கிழித்துப்போட்டு

(இப்படியே)

நிச்சலும்

ப்ரதிநத்யம்
தீமைகள்

துஷ்டசேஷ்டைகளை
செய்வாய்

செய்பவனே!
நீள் திருவேங்கடத்து

உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய்

ஸ்வாமியே!
பச்சை

பசுநிறமுள்ள
தமனகத்தோடு

மருக்கொழுந்தையும்
பாதிரிப்பூ

பாதிரிப்பூவையும்

சூட்டவாராய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மேல்மாடங்களில் ஏகாந்தமாக வாழ்கின்ற பெண்களிடத்திலும் சென்று அவர்களுடைய கச்சுகளையும் பட்டாடைகளையும் கரைகட்டின சேலைகளையும் கிழித்துத் தீம்பு செய்வதை விட்டிட்டுப் பூச்சூட வரவேணுமென்பதாம்.  கச்சு – ‘கஞ்சுகம்’ என்ற வடசொற்சிதைவு  துகிலவை = அவை ஸ்ரீ முதல் வேற்றுமைச் சொல்லுருபு.  நிச்சல் – ‘நித்யம்’ என்ற வடசொல் விகாரம்.  தமநிகம் – வடசொல்.

English Translation

Climbing up the balcony and rooftops, you enter the ladies’ chamber, then tear up their pleated silk corset and shred their frilled linen. Daily you play such mischief. O My Lord of Tiruvenkatam hills, come wear these Padiri flowers with green Davanam springs.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top