(155)

(155)

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து

வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே

மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்

அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.

பதவுரை

கஞ்சன்

கம்ஸனுடைய
புணர்ப்பினில்

கபடமான ஆலோசனையினாலே
வந்த

(நலிவதாக) வந்த
கடிய

(அஸுராவேசத்தாலே) க்ரூரமான
சகடம்

சகடத்தை
உதைத்து

(திருவடிகளால்) உதைத்து முறித்துவிட்டு,
வஞ்சகம்

வஞ்சனையுள்ள
பேய்மகள்

பூதனையானவள்
துஞ்ச

முடியும்படி
முலை

(அவளுடைய) முலையிலே
வாய்வைத்த

வாயைவைத்த
பிரானே

உபகாரகனே!

(உன்மேனி நிறம்பெறும்படி சாத்துவதற்கு உரிய)

மஞ்சளும்

மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும்

(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும்

பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும்

(கண்களிலிடும்) மையையும்

கொண்டு வைத்தேன் —

அழகனே! நீராட வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி  நீ நீராடவேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.

English Translation

O Lord who smote the devilish cart instigated by Kamsa, and sucked the life out of Putana, I have gathered turmeric, lotus garland, fragrant Sandal paste, and Kohl. O Beautiful One, come for your bath!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top