(148)

(148)

காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்

தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே

சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி

ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே.

பதவுரை

காதுகள்

(என்னுடைய) காதுகள்
வீங்கி

வீங்கிப்போய்
எரியில்

எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்

(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்

(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)

நேரிட்டதான
இழுக்கு

சேதம்
என்

ஏதேனுமுண்டோ?

(என்று கண்ணன்  சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)

(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது)

தாரியாது ஆகில்

‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று

(குழந்தைக்குத்) தலைநோய் உண்டாய்விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்

(முன்னமே காது குத்தாமல்) இருந்துவிட்டேன்

அன்பினால் அப்படி விட்டிருந்தது)

குற்றமே அன்றே

(என்னுடைய)  குற்றமேயாமல்லவா?
ஏர்விடை

அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று

அழித்து
இள கன்று

சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட

(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்

ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே

எனக்குக் கண்போன்றவனே’
சேரியில்

இவ்விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்

எல்லாப் பிள்ளைகளும்
காதுபெருக்கி

காதைப் பெருக்கிக்கொண்டு
திரியவும்

திரியாநிற்பதையும்
காண்டி

நீ காணாநின்றாயன்றோ’

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப்போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம்.  தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும், அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க.  காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.

English Translation

O Hrishikesa, You say, “If my ears inflame, what is the difference between you and those girls?” Alas, I bored your ears without a thread fearing it might ache your head. It is my mistake. O Lord who killed the bull Arishtanemi and the calf Vatsasura, dear-as-my-eyes! Look, all the village children go about with thread in their ear-bore.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top