(138)
வாரணிந்த கொங்கையாய்ச்சி மாதவாஉண் ணென்றமாற்றம்
நீரணிந்த குவளைவாசம் நிகழநாறும் வில்லிபுத்தூர்
பாரணிந்த தொல்புகழான் பட்டர்பிரான் பாடல்வல்லார்
சீரணிந்த செங்கண்மால்மேல் சென்றசிந்தை பெறுவார்தாமே.
பதவுரை
| வார் அணிந்த |
– |
கச்சை அணிந்து கொண்டிருக்கிற |
| கொங்கை |
– |
ஸ்தநங்களையுடைய |
| ஆய்ச்சி |
– |
யசோதை |
| மாதவா |
– |
மாதவனே! |
| உண் |
– |
முலையை (உண்பாயாக) |
| என்ற |
– |
என்று (வேண்டிச்) சொன்ன |
| மாற்றம் |
– |
வார்த்தையைக் குறித்தனவான |
| நீர் அணிந்த குவளை |
– |
நீர்நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின் |
| வாசம் |
– |
நல்லவாசனை |
| நிகழ நாறும் |
– |
ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற |
| வில்லிபுத்தூர் |
– |
ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும் |
| பார் அணிந்த |
– |
பூமி முழுவதும் அழகாகப் பரவிய |
| தொல் புகழான் |
– |
பழமையான கீர்த்தியை யுடையவருமான |
| பட்டர்பிரான் |
– |
பெரியாழ்வார் அருளிச் செய்த |
| பாடல் |
– |
பாசுரங்களை |
| வல்லார் |
– |
ஓதவல்லவர் |
| சீர் அணிந்த |
– |
குணங்களாலழகிய |
| செம் கண் மால் மேல் |
– |
சிவந்த திருக்கண்களையுடைய திருமாலிடத்தில் |
| சென்ற |
– |
பதிந்த |
| சிந்தை |
– |
மநஸ்ஸை |
| பெறுவர் |
– |
அடைவார்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – வாரணிந்த கொங்கையாய்ச்சி – ராஜாக்களுக்கு போக்யமான பொருளை வேலைக்காரர் மூடிக்கொண்டு போவதுபோல கண்ணனுக்கு விருப்பமான ஸ்தநங்களை யசோதை பிறர் கண்படாதபடி கச்சினால் மறைத்து வைப்பாளென்க. மாற்றம் (ஆகிய) பாடல் எனத்தொடரும். குவளை – ‘குவலம்’ என்ற வடசொல் விகாரம்; ‘குவலயம்’ என்பது மதுவே; “குவாலயம் குவலயம் குவாலம் குவலம் குவம்” என்பது – வடமொழி நிகண்டு. வாசம் – ‘வாஸநா’ என்ற வடசொற் சிதைவு. ‘நிகழ்நறும்’ என்ற பாடம் பொருந்தாது.
அடிவரவு – அரவணை வைத்த தந்தம் கஞ்சன் தீய மின் பெண்டிர் இருமலை அங்கமலம் ஓட வாரணி போய்.
English Translation
These songs of the world famous Pattarbiran of Srivilliputtur with the fragrance of water-lotus wafting everywhere recalls the corset-breasted Yasoda’s suckle call to Madhava. Those who master I will acquire a mind that dwells on the auspicious lotus-eyed Lord.
