(113)

(113)

சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்

உத்தர வேதியில் நின்ற ஒருவனை

கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட

பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.

பதவுரை

உத்தரவேதியில் நின்ற

உத்தரவேதியிலிருந்த
ஒருவனை

(ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்

குடையை
ஏந்தி

(கையில்) பிடித்துக்கொண்டு
தனி

ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்

ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (ப்போய்)
கத்திரியர்

(அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள்
காண

பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்

உலகம் முழுவதையும்
கொண்ட

(நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்

விலக்ஷணமான
ஆகாரன்

வடிவையுடையனான இவன்

புறம்புல்குவான்-;

பார்

பூமியை
அளந்தான்

(திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்

என் புறம் புல்குவான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சத்திரம் – ?? என்ற வடசொல் திரிபு.  உத்தரவேதி – ஆஹா நீயாக்ஙக்கு வடதிசையிலே யாக்பசுவைக் கட்டுகின்ற  யூபஸ்தம்பத்தை காட்டியன் வேதிகை; இச்சொல் இங்கு யாகபூமியைக் காட்டுமென்க.  சத்திரியர் -க்ஷதிய என்ற வடசொற்ரிபு.  (‘சத்திரிவர்’ என்பது சிலர் பாடம்) பத்திராகாரன் –

English Translation

The Lord approached the sacrificial altar as a beautiful manikin with an umbrella in hand and all auspicious features; he measured and took the earth and all else from Bali, beheld by the assembled kings.  He will come and embrace me from behind.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top